செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

post image

நமது நிருபர்

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற சிந்தூர் ஆபரேஷன் சிறப்பு விவாதத்தில் என்.ஆர்.இளங்கோ பங்கேற்றுப்பேசியதாவது:

எல்லை தாண்டிய பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிஆர்எஃப் அமைப்பை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு எடுத்த நடவடிக்கை என்றும் அது ஒரு ராஜீய வெற்றி என்றும் கூறியதை பாராட்டுகிறோம்.

ஆனால், பிரதமரோ, வெளியுறவு அமைச்சரோ, உள்துறை அமைச்சரோ பாகிஸ்தான் - இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் டிரம்ப் கூறியது தவறு, பொய் என்ற ஒற்றை வரியைத்தான் மத்திய அரசிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேர் கொல்லப்பட்டதாக அரசு கூறுகிறது. இறந்தவர்களின் சடலங்களை ஏற்கெனவே கைதாகி காவலில் உள்ள நபர்களைக் கொண்டு ஏன் அடையாளம் காணக் கூடாது? இந்த விவாகரத்தில் முழு உண்மையும் வெளிவர வேண்டும். சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்தையைப் போல "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்றார் அவர்.

ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!

கர்நாடகத்தில் முன்னாள் அரசு ஊழியர் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கர்நாடகம் மாநிலத்தில் கொப்பல் நகரில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் எழுத்தராகப் பணிப... மேலும் பார்க்க

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க