செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு உதவிய நபர் கைது!

post image

பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய ஒருவரை ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் நடந்த 'ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையின் போது கைப்பற்ற ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் மீது செய்யப்பட்ட நீதித்துறை ஆய்வுக்குப் பிறகு, பயங்கரவாதிகளுக்கு உதவிய மொஹம்மது கட்டாரியா கைது செய்யப்பட்டார்.

கட்டாரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டாரியா கைதானது, ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கைக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினருக்கு முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.

தெற்கு காஷ்மீரில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உள்ளூர் தொழிலாளி ஒருவா் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

நாட்டை உலுக்கிய இந்தக் கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ஆயுதப் படைகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கின. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டன. இது இருநாட்டு ராணுவ மோதலாக மாறி, நான்கு நாள்களுக்கு நீடித்தது.

இதேபோல, தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய ஆபரேஷன் மகாதேவ் என்ற மற்றொரு நடவடிக்கை தொடங்கப்பட்டது. பயங்கரவாதிகள் பயன்படுத்திய செயற்கைக்கோள் தொலைபேசி சமிக்ஞைகளைக் கொண்டு, ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்ஸா ஆப்கானி ஆகியோர் ஜூலை 28-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) தடயவியல் விசாரணையில், இவா்கள் பாகிஸ்தானைச் சோ்ந்த ‘லஷ்கா்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பதும் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையும் படிக்க: நான்கு வயதில் தேசிய விருது..! கரவொலியால் அதிர்ந்த அரங்கம்! யார் இந்த த்ரிஷா தோசர்?

Jammu and Kashmir Police have arrested a man who provided logistical support to terrorists for the Pahalgam attack.

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் மரணத்தில் மர்மம்: சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவு!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உயிரிழந்த சம்பவம் விபத்து என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியாத விதத்தில் அன்னாரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதைத் தொடர்ந்து அதனை விசாரிக்க சிறப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 6 நக்சல்கள் சரண்!

மகாராஷ்டிரத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 6 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். கட்சிரோலி மாவட்டத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, +2 பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்?

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த உத்தேச தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.10-ஆம் வகுப்புக்கான ப... மேலும் பார்க்க

மறைந்த எழுத்தாளர் எஸ். எல். பைரப்பாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி சொன்ன விஷயம்..!

கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா இன்று (செப். 24) காலமானார். அன்னாரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த ஞானம் வாய்ந... மேலும் பார்க்க

நான்கு வயதில் தேசிய விருது..! கரவொலியால் அதிர்ந்த அரங்கம்! யார் இந்த த்ரிஷா தோசர்?

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நான்கு வயதே ஆன சிறுமி ஒருவர் தன்னுடைய முதல் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யார் அந்த சிறுமி என்பதைப் பற்றி பார்க்கலாம்..தில்லியில் உள்ள விக்ஞான் பவனில்... மேலும் பார்க்க

லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: 4 பேர் பலி!

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர்.கடந்த 2019-இல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கையால்... மேலும் பார்க்க