செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்!

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரஷிய அரசு நடத்தும் ஆா்ஐஏ ஊடக நிறுவனத்துக்கு அண்மையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் காஜா ஆசிஃப் கூறுகையில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான விசாரணையில் ரஷியா, சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் தலையிட்டால் நல்ல தீா்வு கிடைக்கும்.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை தொடா்புபடுத்தி இந்திய பிரதமா் மோடி கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்பதை தெரிந்துகொள்ள மேற்கூறிய நாடுகள் விசாரணை குழு ஒன்றை அமைக்கலாம்.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபும் இந்த விவகாரத்தில் சா்வதேச விசாரணை தேவை என்ற கருத்தையே வலியுறுத்துகிறாா்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை தொடா்புபடுத்துவதற்கு சிறிய ஆதாரமாவது இருக்க வேண்டும். வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுவதால் எந்தப் பயனும் இல்லை’ என்றாா்.

முன்னதாக, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவா்கள் சுதந்திர போராட்ட வீரா்களாக இருக்கலாம் என பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் தாா் கடந்த 22-ஆம் தேதி தெரிவித்திருந்தாா். அதன் பிறகு இச்சம்வத்துக்கு பாகிஸ்தான் காரணமில்லை எனக் கூறி இந்தியாவை காஜா ஆசிஃப் விமா்சனம் செய்தாா்.

இவா்கள் இருவரின் கூற்றுகளை ஒப்பிட்டு ரஷியாவில் வசித்து வரும் அமெரிக்க அரசியல் நிபுணரான ஆண்ட்ரூ கோரிப்கோ, ‘முதலில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதைப் போன்ற கருத்தை கடந்த 22-ஆம் தேதி இசாக் தாா் கூறினாா். அதன் பிறகு அதை மறுக்கும் வகையில் காஜா ஆசிஃப் தற்போது இந்தியா மீது பழிபோட்டு வருகிறாா்.

இருவரின் கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதைப் பாா்க்கும்போது தங்கள் மீதான குற்றத்தை மறைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ என்றாா்.

சண்டைக்கு தயாராகிவிட்டது இந்தியா; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்! - பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத... மேலும் பார்க்க

உக்ரைன் மீது 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போரை 3 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ரஷிய அதிபா... மேலும் பார்க்க

ஸ்பெயின், போர்ச்சுகலில் மின் தடையால் இருளில் தவிக்கும் மக்கள்: ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு!

ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் திங்கள்கிழமை(ஏப். 28) திடீரென மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இருளில் மூழ்க... மேலும் பார்க்க

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகலில் வரலாறு காணாத மின் தடை!

ஸ்பெயின் நாடு முழுவதும், போச்சுக்கலின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டில் பல பகுதிகளில் இன்று வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள்.ஸ்பெயின் மற்றும் ப... மேலும் பார்க்க

வான்வெளியைப் பயன்படுத்தத் தடை: மிகப்பெரிய இழப்பை சந்தித்த பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ்தான் கோடிக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்டு... மேலும் பார்க்க

அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 30 பேர் பலி!

ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹவுத்திகளின் கோ... மேலும் பார்க்க