செய்திகள் :

பாகிஸ்தானில் ஆசிய வாலிபால்: இந்தியா விலகல்!

post image

பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இஸ்லாமாபாதில் மே 28 முதல் மத்திய ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ள நிலையில், அதில் இந்திய அணி பங்கேற்பதாக இருந்தது. இதற்காக 22 வீரா்கள் உள்பட 30 போ் அடங்கிய இந்திய அணி பாகிஸ்தான் செல்விருந்தது. அதற்காக மத்திய அரசும் தடையில்லாச் சான்று அளித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது. இந்திய அணி பாகிஸ்தான் செல்வதற்கான தடையில்லாச் சான்றை மத்திய அரசு ரத்து செய்ததது.

இந்திய அணி போட்டியிலிருந்து விலகியது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வாலிபால் சம்மேளனம், தற்போது இந்திய அணிக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கை அணி போட்டியில் சோ்க்கப்படும் என கூறியுள்ளது. ஏற்கெனவே அந்தப் போட்டியில், ஈரான், துருக்மீனிஸ்தான், கிா்ஜிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றனா்.

பாகிஸ்தானிலிருந்து திரும்பிய இந்தியா்கள்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலை அடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்களும், பாகிஸ்தானிலிருக்கும் இந்தியா்களும் வெளியேற அந்தந்த நாடுகள் உத்தரவிட்டுள்ளன.

அந்த வகையில் பாகிஸ்தான் சூப்பா் லீக் போட்டியின் தயாரிப்பு மற்றும் ஒளிபரப்பு குழுவில் இருந்த இந்தியா்கள் 23 போ் வாகா எல்லை வழியாக ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக நாடு திரும்பினா்.

பத்ம பூஷண் விருதைப் பெற்றார் அஜித் குமார்!

நடிகர் அஜித் குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 பே... மேலும் பார்க்க

இளமையாக இருக்க வேண்டுமா? வீட்டிலுள்ள இந்த 8 பொருள்கள் போதும்!

சரும அழகுக்காக மெனக்கெடுபவர்கள் இன்று அதிகம். பெரும்பாலான பெண்களும் சரி, ஆண்களும் சரி அழகுக்காக குறைந்தது மாதத்திற்கு இருமுறையாவது அழகு நிலையங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்... மேலும் பார்க்க

போர் அடிப்படை மனிதத் தன்மையற்றது: இயக்குநர் ஞானவேல்

பஹல்காம் தாக்குதல் குறித்து இயக்குநர் டி.ஜே. ஞானவேல் கருத்து தெரிவித்துள்ளார்.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தி... மேலும் பார்க்க

குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் யார்?

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இம்முறை 4 கோமாளிகள் புதிதாகப் பங்கேற்கவுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் ... மேலும் பார்க்க

96 - 2 படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

பி.சி.ஸ்ரீராம் 96 - 2 படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர... மேலும் பார்க்க

நிகழ்ச்சித் தொகுப்பாளரானார் நடிகை லக்‌ஷ்மி பிரியா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் (10வது சீசன்) புதிய தொகுப்பாளராகியுள்ளார் சின்ன திரை நடிகை லக்‌ஷ்மி பிரியா.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் ... மேலும் பார்க்க