செய்திகள் :

பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தேனா? விஜய் ஆண்டனி விளக்கம்!

post image

காஷ்மீர் படுகொலை குறித்த தன் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விஜய் ஆண்டனி விளக்கமளித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

இத்தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். முக்கியமாக, திரைப்பிரபலங்கள் தங்களின் கருத்துகளை வெளியிட்டதுடன் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

அப்படி, நடிகர் விஜய் ஆண்டனி, “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகக்’ குறிப்பிட்டு, “பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், அங்குள்ள பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதைக்கண்ட பலரும், விஜய் ஆண்டனி பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என அவரைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு,

காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும்.

இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு?

ஹார்ட் பீட் - 2 வெப் தொடர்: வெளியீடு எப்போது?

ஹார்ட் பீட் இணையத் தொடர் 2 ஆம் பாகத்தின் வெளியீடு குறித்து தகவல் தெரியவந்துள்ளது.மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் உள்ளி... மேலும் பார்க்க

அடுத்தடுத்து கைதான மலையாளத் திரைப் பிரபலங்கள்! பின்னணியில் யார்?

மலையாள சினிமாவின் பிரபலங்கள் தொடர்ந்து கைதாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா என்றாலே ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமான விஷயம்தான். ஆனால், சினிமாவிலிருக்கும் பெரும்பாலானவர்களின் கொண்டாட்டங... மேலும் பார்க்க

நீ நான் காதல் தொடர் நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு!

அண்மையில் நிறைவடைந்த நீ நான் காதல் சீரியல் நாயகியின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நீ நான் காதல் தொடர் சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இத்த... மேலும் பார்க்க

செவ்வாயில் வந்த கிருத்திகை: சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்!

பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.வழக்கமாக செவ்வாய் மற்றும் கிருத்திகை நாள்களில் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அல... மேலும் பார்க்க

ஜன நாயகன் டீசர் எப்போது?

விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் ... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. ஆயிரகணக்காd பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவ... மேலும் பார்க்க