செய்திகள் :

பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? வங்கதேசப் பயிற்சியாளர் விளக்கம்!

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்தது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் விளக்கமளித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆசிய கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் வெளியேறியது.

இந்த நிலையில், கேட்ச்சுகளை தவறவிட்டதும், தவறான ஷாட்டுகளை விளையாடியதுமே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடையக் காரணம் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷாகின் மற்றும் நவாஸின் கேட்ச்சுகளை தவறவிட்டபோது, ஆட்டத்தின் போக்கு மாறியது. அதற்கு முன்பு வரை, வங்கதேசம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. சில கேட்ச்சுகளை அதிகப்படியான லைட் வெளிச்சத்தின் காரணமாக தவறவிட்டார்கள். ஆனால், சில கேட்ச்சுகளை வீரர்கள் கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும்.

வங்கதேச அணியின் தோல்விக்கு காரணம் தவறான முடிவுகளே. அனைவரும் நாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம் என நினைத்தார்கள். ஆனால், எங்களது வீரர்கள் சரியான ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடவில்லை. இலங்கைக்கு எதிரான போட்டியில் 169 ரன்களை துரத்திப் பிடித்து வெற்றி பெற்றோம். அணியில் கேப்டன் லிட்டன் தாஸ் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. பேட்டர்கள் சரியான ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடியிருக்க வேண்டும் என்றார்.

வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி நாளை மறுநாள் (செப்டம்பர் 28) துபையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The head coach of Bangladesh has explained the team's defeat against Pakistan in the Super 4 round of the Asia Cup cricket.

இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் மோசமான வரலாறு மாறுமா?

கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; பாக். வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை!

பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் அறிவுரை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூ... மேலும் பார்க்க

தோனியும், கோலியும்கூட துப்பாக்கியால் சுடுவது போல் சைகை செய்துள்ளனர்! - பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான்

துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகை அரசியல் அல்ல; இதனை இந்திய கேப்டன்கள் தோனியும் விராட் கோலியும்கூட செய்துள்ளனர் என பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஐசிசி விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை ... மேலும் பார்க்க

ஷகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனின் சாதனையை அந்த அணியின் சக வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் முறியடித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் துபையில் நேற்று (செப்டம்... மேலும் பார்க்க

பும்ரா - கைஃப் மோதல்: என்ன பிரச்னை?

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் மறுப்புக்கு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விளக்கம் அளித்துள்ளார்.தன்னுடைய கருத்தை தவறாக எடுக்க வேண்டாம் எனவும் அதெல்லாம் தனது நீண்டகால கிரிக்கெட்டின் அ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் மோசமான வரலாறு மாறுமா?

ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் மோசமான வரலாறு மாறுமா? என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஆசியக்கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 ... மேலும் பார்க்க

41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவதென்ன?

ஆசியக் கோப்பைத் தொடரில் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுடன் முதல்முறையாக இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுவது குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் கருத்து தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்ப... மேலும் பார்க்க