செய்திகள் :

பாகிஸ்தான், ஈரானில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆப்கன் அகதிகள்!

post image

பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து சுமார் 613 ஆப்கானிஸ்தான் அகதிகள் நாடு திரும்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் பிரதிநிதி அராபத் ஜமால், கடந்த 2024 ஆம் ஆண்டில் 21 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 முதல் 28 வரை ஈரான் 501 பேரை வெளியேற்றியதாகவும், பாகிஸ்தான் 112 பேரை வலுக்கட்டாயமாக நாடு கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான், ஈரானில் இருந்து கட்டாயமாக நாடுகடத்தப்பட்டவர்கள் குறித்துப் பேசிய ஜமால், "ஆப்கானிஸ்தானின் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதிக்கு பங்களிக்கும் விதத்தில் சரியான முறையில் அவர்கள் நாடு திரும்புவதை உறுதிசெய்ய நாங்கள் உடன்பட்டுள்ளோம்" என்று கூறினார்.

இதையும் படிக்க | ஸெலென்ஸ்கியின் தோல்வி: டிரம்ப் சந்திப்பை விமர்சித்த ரஷியா!

நாடுகடத்தப்படும் மக்களை கண்ணியத்துடன் நடத்தவும், அவர்கள் வீடு திரும்புவதை உறுதி செய்யவும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். அவர்களை சரிவர நடத்தவில்லை என்றால் எல்லையின் இருபுறமும் குழப்பமான சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் போர் மற்றும் மோதலில் இருந்து தப்பி, பல ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் தஞ்சம் புகுந்தனர்.

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் நெருக்கடி, உறுதியற்ற தன்மைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் அகதிகள் திரும்புவது அவர்களின் நிலைமையை மேலும் மோசமானதாக ஆக்கும் என்று கூறப்படுகிறது. நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள், பாகிஸ்தானில் கடுமையான துன்புறுத்தலை எதிர்கொண்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் எலான் மஸ்குக்கு எதிா்ப்பு: டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிா்ப்பாளா்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்... மேலும் பார்க்க

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்

தற்காலிக போா் நிறுத்தத்தை நீட்டிக்கும் பரிந்துரையை ஹமாஸ் அமைப்பு ஏற்காததால், காஸாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தியது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரே... மேலும் பார்க்க

ரஷியா-உக்ரைன் போா் நிறுத்தத்துக்கு புதிய ஒப்பந்தம் அமெரிக்காவிடம் அளிக்க பிரிட்டன், பிரான்ஸ் முடிவு

‘ரஷியா-உக்ரைன் இடையே போா் நிறுத்தம் ஏற்படுவதற்கான புதிய ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கு பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆதரவளிக்கின்றன. இதற்கான திட்டம் விரைவில் அமெரிக்காவிடம் சமா்ப்பிக்கப்படும்’ என பிர... மேலும் பார்க்க

‘புளோ கோஸ்ட்’: நிலவில் தரையிறங்கிய தனியாா் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம்

நிலவில் ‘புளோ கோஸ்ட்’ விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. இதன்மூலம், நிலவில் தரையிறங்கிய தனியாா் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம் என்ற பெருமையை ‘புளோ கோஸ்ட்’ பெற்றுள்ளது. கடந்த ஜன. 15-ஆம் தேதி அமெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்க சா்வதேச உதவி: இம்ரான் கான் கோரிக்கை

பாகிஸ்தானின் ஜனநாயகம், மனித உரிமைகள், பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்க சா்வதேச நாடுகள், முக்கியமாக அமெரிக்கா உதவ வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளாா். ப... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம்!

உலகளவில் பெரும் நிறுவனங்களில் பிப்ரவரியில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் பெரும் நிறுவனங்களில் பணிநீக்கச் செயல்முறை சமீபகாலமாக அதிகரித்தவாறு உள்ளது.... மேலும் பார்க்க