செய்திகள் :

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உறுதியான பதிலடி- ஒவைசி மீண்டும் வலியுறுத்தல்

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உறுதியான பதிலடி தரப்பட வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி மீண்டும் வலியுறுத்தினாா்.

காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து குல்காமில் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் பேச வேண்டியுள்ளது. இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல். எவ்வளவு கண்டனங்களைத் தெரிவித்தாலும் அது போதுமானதாக இருக்காது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 பேரை எப்படி கொலை செய்துள்ளனா்? ஆண்களை மட்டும் தோ்வு செய்து அவா்களின் மதத்தைக் கேட்டுள்ளனா். பின்னா் அவா்களை ‘கலிமா’ (இஸ்லாமிய துதி) கூற வலியுறுத்தியுள்ளனா். அதனைக் கூறத் தெரியாதவா்களை சுட்டுக்கொலை செய்துள்ளனா். இது காட்டுமிராண்டித்தனமானது.

பயங்கரவாதிகளின் இந்தச் செயலால் ஒட்டுமொத்த காஷ்மீா் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். இங்கு சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டி வந்தவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் முற்றிலுமாக காஷ்மீரில் இருந்து வெளியேறிவிட்டனா். இதற்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு மத்திய அரசு உறுதியான பதிலடி கொடுக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.

நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (மே 7) தேசியளவில் அனைத்து மாநிலங்களிலும் போர்கா... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்திகை: இருளில் மூழ்கியது தில்லி!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வரு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போ... மேலும் பார்க்க

போர் பாதுகாப்பு ஒத்திகை: தில்லியில் இன்று மின்சாரம் துண்டிப்பு!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று (மே 7) இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்ச... மேலும் பார்க்க

இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட 23,000 முகநூல் பக்கங்கள் முடக்கம்!

இந்தியா மற்றும் பிரேஸிலில் முதலீடு மோசடி தொடர்பான முகநூல் கணக்குகளை மெட்டா நிறுவனம் நீக்கியது.இந்தியா மற்றும் பிரேஸில் நாடுகளில், மார்ச் மாதத்தில் மட்டும் முதலீடு மோசடி தொடர்பான முகநூலின் 23,000-க்கும... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் மனைவி கருத்து!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க