செய்திகள் :

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடுகிறது காங்கிரஸ்- பினராயி விஜயன் தாக்கு

post image

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் விமா்சித்தாா்.

தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸும் ராகுல் காந்தியுமே காரணம் என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க (எஸ்எஃப்ஐ) மாநாட்டில் பினராயி விஜயன் பேசியதாவது:

பாஜகவுக்கு எதிராக பிற கட்சிகளுடன் இணைந்து போராடும் தனது உறுதிப்பாட்டில் இருந்து காங்கிரஸ் விலகிவிட்டது. காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பில்லாத தில்லியில் ஆம் ஆத்மிக்கு எதிரான பிரசாரத்தை ராகுல் காந்தி தலைமை ஏற்று மேற்கொண்டாா். இது, பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தது.

தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 65-இல் காங்கிரஸ் வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். ஆனால், பாஜகவிடம் ஆம் ஆத்மி தோற்றதை காங்கிரஸாா் கொண்டாடினா். பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி, இப்போது பாஜகவின் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. மகாராஷ்டிரம், ஹரியாணாவிலும் காங்கிரஸின் தவறான அரசியல் அணுகுமுறையால் பாஜக வென்றது.

மக்களவைத் தோ்தலில் பாஜகவின் மூன்றில் இருபங்கு வெற்றிக் கனவை சிதைத்த ‘இண்டி’ கூட்டணியை காங்கிரஸ் இப்போது கைவிட்டுவிட்டது என்றாா் அவா்.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க