செய்திகள் :

பாஜகவில் நயினார், அண்ணாமலை இடையே போட்டி: அமைச்சர் சேகர் பாபு

post image

பாஜகவில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அண்ணா, பெரியார், ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தவர் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை.

அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர் முன்னாள் அமைச்சர்கள்.

பவன் கல்யாணக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு. பவன் கல்யாண், சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும் பிறகு அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் நாங்கள் கேட்கிறோம்.

இதுவரை 117 முருகன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. மேடை போட்டு மக்களை பிளவுபடுத்துகிறார்கள் பாஜகவினர். பாஜகவில் நைனார் நாகேந்திரன் பலமுடையவரா ? அண்ணாமலை பலம் வாய்ந்தவரா என்ற போட்டி நிலவுகிறது.

ஒருவர் பச்சை துண்டை எடுத்து சுற்றிக் கொண்டு இருக்கிறார் அது நயினார் நாகேந்திரன், காவி துண்டை எடுத்து சுற்றிக் கொண்டு இருப்பவர் அண்ணாமலை.

யார் வெற்றி பெறுகிறார்கள் என்று இனி தான் தெரியும். இவர்கள் போட்டிக்காக நடந்த மாநாடு தான் மதுரை முருகர் மாநாடு என்றார்.

ஆ.ராசாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொள்கையை எப்போதும் விட்டுத்தரமாட்டார் இபிஎஸ்: முன்னாள் அமைச்சர் வேலுமணி

கொள்கையை எப்போதும் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கமாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.முருகன் மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித... மேலும் பார்க்க

திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம்! நிர்வாகிகள் நியமனம்!

திமுகவில் புதிதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவில் புதியதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்... மேலும் பார்க்க

நீட் தேர்வில் பணம்தான் விளையாடுகிறது: மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.2025 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை: அதிமுக

முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கவில்லை என அதிமுக அறிவித்துள்ளது. மாநாட்டில், பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட விடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியா... மேலும் பார்க்க

குண்டர் தடுப்புச் சட்டத்துக்குள் சைபர் குற்றவாளிகள்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் வரவேற்பு

தமிழகத்தில் இணையவழி (சைபர்) குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை உ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(ஜூன் 23)தமிழகத்தில் ஒருசில இட... மேலும் பார்க்க