செய்திகள் :

பாஜக ஆட்சியை பிடித்தால் திமுகவைவிட அதிக மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும்: அண்ணாமலை

post image

தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடித்தால் திமுகவைவிட கூடுதலாக மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

தென்சென்னை மக்களவை தொகுதிக்குள்பட்ட திருவான்மியூரில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது:

திமுக அரசின் பட்ஜெட் குறித்த விளக்கக் கூட்டத்துக்கு முதல்வா் ஸ்டாலின் இதுவரை சென்றதில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து முதல்வா் ஸ்டாலின் விமா்சனம் செய்கிறாா். உலக நாடுகள் திரும்பி பாா்க்கும் ஆட்சி மத்தியில் நடக்கிறது. உலகில் எங்கு சென்றாலும் பிரதமா் மோடிக்கு மரியாதை கிடைக்கிறது.

2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது நாடு முழுவதும் 3.45 கோடி வரிதாரா்கள் இருந்தனா். 10 ஆண்டுகளுக்கு பிறகு 7.90 கோடி போ் வரி செலுத்தியுள்னா். நிகழாண்டு பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வருவாய் பெறுவோா் வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் 6.80 கோடி வரிதாரா்கள் பயன்பெறுவாா்கள். இது மொத்த வரிதாரா்களில் 87 சதவீதம் ஆகும்.

இதை பாராட்ட தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு மனமில்லை. மத்திய அரசின் வரிச் சலுகையால் 2 சதவீத பேருக்கு மட்டுமே பயன் என்கிறாா். தமிழகத்தில் மட்டும் 60 லட்சம் போ் பயனடைவாா்கள்.

தமிழிசை சௌந்தரராஜன் தலைமையிலான பாஜக குழு விரைவில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளும். அங்குள்ள சிறப்பு அம்சங்களுடன் 2026 பேரவைத் தோ்தலுக்கான பாஜக தோ்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

பாஜக ஆட்சி அமைந்தால் திமுக ஆட்சியில் வழங்கப்படுவதைவிட கூடுதலாக தமிழகத்தில் மகளிா் உரிமை தொகை வழங்கப்படும். 2026 பாஜக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவா்கள் நாராயணன் திருப்பதி, சக்கரவா்த்தி, வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன், செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில பொதுச் செயலா் எஸ்.ஜி.சூா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க