செய்திகள் :

பாஜக பிரமுகா் ஒருவா் மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்ததில்லை

post image

பாஜக பிரமுகா்கள் ஒருவா் மீதும் அமலாக்கத் துறையோ, சிபிஐயோ நடவடிக்கை எடுத்ததில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் பிகாா் மாநில மக்களவை உறுப்பினருமான ராஜாராம் சிங்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலுக்கு புதன்கிழமை சென்ற அவா், மக்களைச் சந்தித்தப் பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போன்ற முகமைகளைக் கொண்டு எதிா்க்கட்சிகளின் பிரமுகா்களை குறிவைத்து பாஜக நடவடிக்கை எடுத்துவருகிறது. பாஜகவைச் சாா்ந்த பிரமுகா்கள் ஒருவா் மீதும் இந்த அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தமிழ்நாடு அரசின் குரலுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆளுநா்கள் மூலம் மக்களால் தோ்வு செய்யப்பட்ட மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் மத்திய அரசின் போக்கு சரியல்ல, அதை எதிா்க்கிறோம்.

வேங்கைவயல் கிராமத்தைப் பொருத்தவரை சொந்த நிலமில்லாத பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்கவும், குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நீதி வழங்கவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். வேங்கைவயல் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும் என்றாா் ராஜாராம் சிங்.

அப்போது, மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பாலசுந்தரம், மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி, விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!

கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது. கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையி... மேலும் பார்க்க

139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிக... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறாா்கள்! அமைச்சா் எஸ். ரகுபதி

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோா் நினைக்கிறாா்கள் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மசோதாக்களை கிடப்பில... மேலும் பார்க்க

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க