செய்திகள் :

'பாஜக-வோடு கூட்டணியை ஏற்கவில்லை' - ராஜினாமா கடிதம் அனுப்பிய அதிமுக நிர்வாகி

post image

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் என்.டி.ஏ கூட்டணி போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவோடு கைகோத்து, இந்த அறிவிப்பின் போது உடன் இருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த முடிவு, அ.தி.மு.க கட்சிக்குள் ஆதரவையும், எதிர்ப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ADMK - BJP - எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா
ADMK - BJP - எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா

அ.தி.மு.க புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கருக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில், ``பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக” முகமது கனி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில், 'மாவட்டச் செயலாளர் அவர்களுக்கு, நான் கடந்த 45 வருடங்களாக கழகத்தின் பல பொறுப்புகளிலிருந்து கழகப் பணியாற்றியுள்ளேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பாசிச பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்ததை அடுத்த கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

letter

இதுகுறித்து, கே.எஸ்.முகமது கனியிடம் பேசினோம்.

"மாவட்டச் செயலாளர் சென்னையில் இருக்கிறார். நான் பதிவு தபால் மூலம் என் ராஜினாமா கடிதத்தை அவருக்கு அனுப்பியுள்ளேன். இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க-வோடு அ.தி.மு.க கூட்டணி வைத்ததை விரும்பாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.

கோவையில் நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பு; அண்ணாமலை மிஸ்ஸிங் டு மேடையில் வெளியான அறிவிப்பு!

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை மண்டல பாஜக சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. நயினார் வருவதற்... மேலும் பார்க்க

'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' - நயினார் நாகேந்திரன்

கோவை காளப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அந்தக் கட்சியினர் சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “கூட்டணி, எத்தன... மேலும் பார்க்க

'கூட்டணி வேறு... கொள்கை வேறு; வக்பு சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளோம்' - வேலுமணி

கோவை அதிமுக சார்பில் நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமண க... மேலும் பார்க்க

'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனிவாசன்

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கோவை வருகை புரிந்தார். அவருக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெ... மேலும் பார்க்க

`இறந்து' விட்டதாக இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு; ஆம்புலன்ஸில் திடீரென அசைந்த உடல்... என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், தோகைபாடியை சேர்ந்தவர் பிரகாஷ். மிகுந்த உடல் நலக்குறைகளுடன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 10 நாள்களாகத் தீவிர சிகிச்சை பெற்று ... மேலும் பார்க்க

`மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு'- மராத்திக்காக பகையை மறந்து கூட்டணி சேரும் தாக்கரே சகோதரர்கள்?

மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை வரும் கல்வியாண்டில் இருந்து இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் மாநில அரசு கூடுதலாக ஒ... மேலும் பார்க்க