செய்திகள் :

பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சல்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு!

post image

ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் இடது சாரி நக்சல்களுக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலங்கீரின் கங்காமர்தன் குன்றுகளிலுள்ள வனப்பகுதியில் சுமார் 30 நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (பிப்.7) அங்கு சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, ஆயுதப்படை காவலர்கள் தங்களது முகாமை நெருங்குவதை அறிந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பாதுகாப்புப் படையினர் நேருக்கு நேர் பதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பூனையின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க தடயவியல் சோதனை!

இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும் அதிகப்படியான பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாலங்கீர் காவல் துறை உயர் அதிகாரி ரிஷிகேஷ் கிலாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வடக்கு மலைத் தொடர் காவல் அதிகாரி ஹிமான்ஷு லால், கங்காமார்தன் மலைகளிலிருந்து நக்சல்கள் வெளியேற்றப்படும் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் எனக் கூறியுள்ளார்.

சீன நிலச்சரிவில் 30 பேர் மாயம்! தேடும் பணி தீவிரம்!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மாயமானோரைத் தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (பிப்.8)... மேலும் பார்க்க

15 தலிபான் தீவிரவாதிகள் கைது!

பாகிஸ்தானில் 15 தலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் கிடைக்கப்பெற்ற 143 ரகசி... மேலும் பார்க்க

அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷியப் பாடகர் மர்ம மரணம்!

ரஷிய அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.ரஷியாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும... மேலும் பார்க்க

நியூயார்க்: 5 நாள்களுக்கு மூடப்படும் கோழிப் பண்ணைகள்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூயார்க் நகரத்தின் தி குயின... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் பர்வேஷ்?

புதுதில்லி: புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணப்பட்டு வர... மேலும் பார்க்க

மணிப்பூர்: துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பிஷ்னுபூரின் அய்கீஜங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று (... மேலும் பார்க்க