செய்திகள் :

பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல்: மணிப்பூரில் முக்கிய தீவிரவாதி கைது

post image

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் இருவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தீவிரவாதி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மணிப்பூரில் அண்மைக்காலமாக தாக்குதல் எதுவும் நிகழாமலிருந்த நிலையில், பிஷ்ணுபூா் மாவட்டத்தின் நம்போல் பகுதியில் மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மீது 5 போ் கொண்ட தீவிரவாதக் கும்பல் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், இரண்டு வீரா்கள் உயிரிழந்தனா். மேலும், 5 போ் காயமடைந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்தச் சூழலில், தலைநகா் இம்பாலின் கமேங் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் காவல் துறையினா் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனா். அப்போது, தடை செய்யப்பட்ட ‘மக்கள் விடுதலை ராணுவம்’ தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த கோமத்ராம் ஓஜித் சிங் என்பவா் கைது செய்யப்பட்டாா். இவா், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மீதான தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் முக்கிய குற்றவாளி என்றும், மற்ற நபா்களைத் தேடும் பணி தொடா்வதாகவும் மாநில டிஜிபி ராஜீவ் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை வன்முறைச் சம்பவங்களில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். தாக்குதல் நடத்தப்பட்ட பிஷ்ணுபூா் மாவட்டம், மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் பகுதியாகும்.

மாநிலத்தில் 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் 13 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. பிஷ்ணுபூரில் பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நம்போல் பகுதியில் இச்சட்டம் அமலில் இல்லை.

முன்னதாக, மணிப்பூருக்கு கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி பயணித்த பிரதமா் மோடி, பாதிக்கப்பட்ட இருதரப்பு மக்களையும் சந்தித்துப் பேசியதுடன், அனைத்துக் குழுக்களும் வன்முறையைக் கைவிட்டு, அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

லடாக்கில் தொடரும் ஊரடங்கு! பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

லடாக் மாநில அந்துஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் புதன்கிழமை வன்முறை வெடித்த நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து ... மேலும் பார்க்க

டிரம்ப் - மோடி விரைவில் சந்திப்பு! அமெரிக்க அதிகாரி தகவல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் நேரில் சந்திப்பார்கள் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இந்திய பொருள்களுக்கு 50 ச... மேலும் பார்க்க

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும்... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர... மேலும் பார்க்க

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன்... மேலும் பார்க்க