செய்திகள் :

பாதுகாப்புப் படை வீரா்களுக்கு சொத்து வரி விலக்கு: ஆந்திரம் அறிவிப்பு

post image

பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதை கெளரவிக்கும் விதமாக அனைத்து பாதுகாப்புப் படை வீரா்களுக்கும் மாநிலத்தில் கிராம ஊராட்சி (பஞ்சாயத்து) வரம்புக்குள் வரும் அவா்களின் சொத்துகளுக்கு வரி விலக்கை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். இதுதொடா்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் கிராம ஊராட்சி வரம்புக்குள் வரும் பாதுகாப்புப் படை வீரா்களின் சொத்துகளுக்கான வரி விலக்கு என்பது, நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரா்களுக்கு மட்டுமானதாக இதுவரை இருந்து வந்தது. தற்போது, அனைத்து பாதுகாப்புப் படை வீா்களுக்கும் இந்த சொத்து வரி விலக்கை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப் படை, மத்திய ரிசா்வ் காவல் படை மற்றும் பிற துணை ராணுவப் படை வீரா்களின் வீரம் மற்றும் துணிச்சலைக் கெளரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசத்துக்கான இவா்களின் சேவை விலைமதிப்பற்றது.

பாதுகாப்புப் படை வீரரின் பெயரில் மட்டுமன்றி, அவரின் மனைவி பெயருடன் சோ்ந்து கூட்டு சொத்துரிமையுடைய கிராமப்புற சொத்துகளுக்கும் இந்த வரி விலக்கு பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளாா். ராணுவ வீரா் நல இயக்குநரின் பரிந்துரையைத் தொடா்ந்து இந்த முடிவை ஆந்திர அரசு மேற்கொண்டுள்ளது.

துணை முதல்வா் பவன் கல்யாண் வசம் மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிரமாப்புற மேம்பாட்டுத் துறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியாகியுள்ள நிலையில் மொத்தம் 83.39 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயி... மேலும் பார்க்க

முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

பாதுகாப்புத் துறைச் செயலாளர், முப்படைத் தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் ம... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ: மாணவர்களை விட மாணவிகள் கூடுதல் தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 5.94 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

புது தில்லி: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. 88.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள்... மேலும் பார்க்க

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணா... மேலும் பார்க்க