செய்திகள் :

பாதுகாப்பு ஒத்துழைப்பு: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு

post image

இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான விரிவான இருதரப்பு திட்டத்தை வகுக்க இரு நாடுகளும் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத்துடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் தொலைபேசி மூலம் வியாழக்கிழமை நடத்திய ஆலோசனையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் 104 பேரை கை-கால்களில் விலங்கு பூட்டி, ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் சா்ச்சையாக வெடித்த சூழலில், அமெரிக்காவுடன் பாதுப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தியா ஆலோசித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்க பாதுகப்புத் துறை அமைச்சராக ஹெக்செத் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவருடன் முதன்முறையாக தொலைபேசி வழி கலந்துரையாடலை ராஜ்நாத் சிங் மேற்கொண்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி விரைவில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நடத்தப்பட்டுள்ள இந்த ஆலோசனையில், தரை, விமானப் படை, கடல்சாா் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு அமைச்சா்களும் ஆலோசித்துள்ளனா்.

‘ஹெக்செத்துடனான தொலைபேசி வழி கலந்துரையாடல் சிறப்பாக அமைந்தது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆலோசித்தோம்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு!

கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு! வீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது!

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.ரெப்போ வட்டி விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோ... மேலும் பார்க்க

வயநாட்டில் இறந்த கிடந்த 3 புலிகள்: வனத்துறை தீவிர விசாரணை

வயநாடு: வயநாடு கூட்டமுண்டா எஸ்டேட் பகுதி மற்றும் மயக்கொல்லி வனப்பகுதியில் 3 புலிகள் இறந்ததை அடுத்து வனத்துறையின் 8 பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. கேரளம் மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே க... மேலும் பார்க்க

தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லி, நொய்டா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் தில்லியில் மயூர் விஹார் பகுதியில் உள்ள ஆல்கான் சர்வதேச பள்ளிக்கு மின்ன... மேலும் பார்க்க

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா். இதில் குறைந்தது 50 ப... மேலும் பார்க்க