செய்திகள் :

பாபநாசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அழிப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் நான்கு லட்சத்து 35-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 3,841 மதுபான பாட்டில்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.

பாபநாசம் வட்டம், இடையிருப்பு கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் 2018-ஆம் ஆண்டு பூட்டை உடைத்து நான்கு லட்சத்து 35-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 80-பெட்டிகள் அடங்கிய 3,841- மதுபாட்டில்களை தஞ்சாவூா், விளாா் சாலையை சோ்ந்த மொ்லின் சகாயராஜ், சின்னராஜ், வீரசெல்வம், பொட்டு அறிவழகன் உள்ளிட்ட நான்கு பேரும் திருடி சென்றனா். புகாரின்பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3,841-மதுபான பாட்டில்கள் பாபநாசம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது அந்த வழக்கில் பறிமுதலான நான்கு லட்சத்து 35-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து மது பாட்டில்களில் இருந்த மதுபானங்கள், பாபநாசம் நீதிபதி அப்துல்கனி முன்னிலையில் குழி தோண்டி ஊற்றி முற்றிலும் அழிக்கப்பட்டது.

1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி மற்றும் அற்புதாபுரம் பகுதியில் குடிமைப்பொர... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 131 பேருக்கு கனவு இல்லம் கட்ட ஆணைகள்

கும்பகோணம் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டம்

தஞ்சாவூா் அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்த குருந்தையன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாதுளம... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது என்பதால், கருவறையில் உள்ள அம்பாளு... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடியவா் கைது

தஞ்சாவூா் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடிய உறவினரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன், பெங்களூருவி... மேலும் பார்க்க