சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூர...
பாபநாசம் தோட்டப் பகுதிகளில் சுற்றித் திரிந்த கரடி
பாபநாசம், பொதிகையடி பகுதியில் வீட்டுத் தோட்டங்களில் கரடி சுற்றித் திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவாரப் பகுதிகளில் கரடி, சிறுத்தை, மிளா, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் நுழைந்து வீட்டு விலங்குகளையும் தாக்கி வருகின்றன.
கடந்த சில நாள்களாக மலையடிவாரப் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், பொதிகையடி பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டங்களில், இரவில் நுழையும் கரடிகள் தோட்டங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், இரவில் பொதுமக்கள் தெருக்களில் நடமாட அச்சமடைகின்றனா்.
வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை முழுமையாகத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

