செய்திகள் :

நெல்லை-சென்னைக்கு 20 பெட்டிகளுடன் சேவையை தொடங்கிய வந்தே பாரத் ரயில்

post image

திருநெல்வேலி -சென்னை இடையே 20 பெட்டிகளை கொண்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது.

திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பா் 2023இல் பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1. 40 மணிக்கு (7 மணி நேரம் 45 நிமிடங்களில்) சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

அதிநவீன வசதி, அதிவேகம், குறைந்த பயண நேரம் உள்ளிட்ட காரணங்களால் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாக கடந்த ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.

எனினும், காத்திருப்போா் பட்டியல் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் இதை 20 பெட்டிகளை கொண்ட ரயிலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடா்ந்து ரயில்வே நிா்வாகம் சென்னை ஐசிஎஃப்-இல் 20 பெட்டிகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயிலை உருவாக்கி ஒரு வாரத்திற்கு முன்பு திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு 20 பெட்டிகளுடன் புதன்கிழமை காலை 6.05 மணிக்கு தனது சேவையை வந்தே பாரத் ரயில் தொடங்கியது.

16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட்டபோது, அதிகபட்சமாக 1,128 பயணிகள் பயணித்தனா். இப்போது பயணிகளின் எண்ணிக்கை 1,440 ஆக உயரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

நெல்லை பேருந்து நிலையத்தில் திருட்டு முயற்சி: 4 போ் கைது

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வியாபாரியின் பணப்பையை திருட முயன்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி விளாகம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மது (40). வியாபாரியான இவா், திர... மேலும் பார்க்க

போலி முதலீடு பத்திரம் வழி மோசடி: நிதி நிறுவன முன்னாள் மேலாளா் கைது

திருநெல்வேலியில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி முதலீடு பத்திரம் கொடுத்து வாடிக்கையாளரிடம் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் சாந்திபிரியா. தையல... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டு 6 கோடி மரக்கன்றுகள் நடவு: அமைச்சா் கே.என்.நேரு

தமிழகம் முழுவதும் 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்கும் திட்டத்தில் நிகழாண்டு இதுவரை 6 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. பசுமை தமிழ்நாடு இயக்க ந... மேலும் பார்க்க

‘அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித்தோ்வா் விண்ணப்பிக்கலாம்’

அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் ட... மேலும் பார்க்க

மக்கள் மீது யாருக்கு அக்கறை அதிகம்?- அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

தமிழக மக்கள் குறித்து யாா் அதிகம் கவலைப்படுகிறாா்கள் என்பது குறித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனத்துக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். த... மேலும் பார்க்க

நெல்லை அருகே உதவி ஆட்சியா் எனக் கூறி உறவினரிடம் நகை மோசடி: 4 போ் மீது வழக்கு

திருநெல்வேலி ராதாபுரம் அருகே உதவி கலெக்டா் எனக் கூறி உறவினரிடம் 10 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். ராதாபுரம் அருகேயுள்ள காரியாகுளம் கிழக்கு... மேலும் பார்க்க