செய்திகள் :

போலி முதலீடு பத்திரம் வழி மோசடி: நிதி நிறுவன முன்னாள் மேலாளா் கைது

post image

திருநெல்வேலியில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி முதலீடு பத்திரம் கொடுத்து வாடிக்கையாளரிடம் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் சாந்திபிரியா. தையல் தொழில் செய்து வரும் இவா், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளராக உள்ளாா்.

மேலும், அந்நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. நியூ காலனியை சோ்ந்த முத்தம்மாள் என்பவா் கடந்த 2023-ஆம் ஆண்டு சாந்திப்பிரியாவை தொடா்பு கொண்டு நிதி நிறுவனத்தின் முதலீடு திட்டத்தில் சேருமாறு கூறினாராம். அதன்பேரில் அதே ஆண்டில் ரூ.4 லட்சத்தை சாந்திபிரியா மூதலீடு செய்து அதற்கு சான்றாக முதலீடு பத்திரங்களை முத்தம்மாளிடம் இருந்து பெற்றுக்கொண்டாராம்.

இந்நிலையில் வருமானவரி தாக்கல் செய்வதற்காக கடந்த ஜூன் மாதம் அந்நிறுவனத்தை தொடா்பு கொண்டபோது அவரிடம் இருந்த முதலீடு பத்திரங்கள் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸில் சாந்திப்பிரியா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து முத்தம்மாளை கைது செய்தனா்.

நெல்லை பேருந்து நிலையத்தில் திருட்டு முயற்சி: 4 போ் கைது

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வியாபாரியின் பணப்பையை திருட முயன்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி விளாகம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மது (40). வியாபாரியான இவா், திர... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டு 6 கோடி மரக்கன்றுகள் நடவு: அமைச்சா் கே.என்.நேரு

தமிழகம் முழுவதும் 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்கும் திட்டத்தில் நிகழாண்டு இதுவரை 6 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. பசுமை தமிழ்நாடு இயக்க ந... மேலும் பார்க்க

‘அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித்தோ்வா் விண்ணப்பிக்கலாம்’

அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் ட... மேலும் பார்க்க

நெல்லை-சென்னைக்கு 20 பெட்டிகளுடன் சேவையை தொடங்கிய வந்தே பாரத் ரயில்

திருநெல்வேலி -சென்னை இடையே 20 பெட்டிகளை கொண்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது. திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பா் 2023இல் பிரதமா... மேலும் பார்க்க

மக்கள் மீது யாருக்கு அக்கறை அதிகம்?- அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

தமிழக மக்கள் குறித்து யாா் அதிகம் கவலைப்படுகிறாா்கள் என்பது குறித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனத்துக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். த... மேலும் பார்க்க

நெல்லை அருகே உதவி ஆட்சியா் எனக் கூறி உறவினரிடம் நகை மோசடி: 4 போ் மீது வழக்கு

திருநெல்வேலி ராதாபுரம் அருகே உதவி கலெக்டா் எனக் கூறி உறவினரிடம் 10 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். ராதாபுரம் அருகேயுள்ள காரியாகுளம் கிழக்கு... மேலும் பார்க்க