செய்திகள் :

பாப்கார்னை தொடர்ந்து அதிக வரி விதிப்பில் டோனட்கள்: காங்கிரஸ்

post image

பாப்கார்னுக்கு அடுத்தப்படியாக டோனட்கள் அதிக வரி விதிப்புக்குள்ளாகியிருப்பதாக காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ராமேஷ் எக்ஸ் தளத்தில்..

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சங்கிலி மேட் ஓவர் டோனட்ஸ், பேக்கரி பொருள்களுக்கு 18 சதவீத வரி செலுத்துவதற்குப் பதிலாக, தனது வணிகத்தைத் தவறாக வகைப்படுத்தி 5 சதவீத ஜிஎஸ்டி செலுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ரூ.100 கோடி அபராதத்தை எதிர்கொண்டுள்ளது.

பாப்கார்னுக்கு அடுத்தபடியாக தற்போது டோனட்கள் அதிக ஜிஎஸ்டியால் பாதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதைக் குறிப்பிட்டு, வணிகம் செய்வதை எளிதாக்குதல் அவசியம் என்றும் அவர் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பரில் ஜிஎஸ்டியின் கீழ் பாப்கார்னுக்கு மூன்று வெவ்வேறு விதமான வரிகள் விதிக்கப்பட்டது, ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்த சிக்கல்களை வெளிப்படுத்தியிருக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ், மேலும் ஜிஎஸ்டி 2.0-ஐ மறுசீரமைத்து, முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த மோடி அரசு முன்வருமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த ஜி.எஸ்.டி 2.0 சிக்கல்கள் பற்றி காங்கிரஸ் 2024-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது வெளியிட்ட நியாய பத்திரம் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததாகவும் அதில் எளிய வரி விதிப்பு குறித்துத் தெரிவித்து, அதனை கொண்டு வருவதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தியா - சீனா போட்டி, மோதலாக மாறக் கூடாது: பிரதமர் மோடி

இந்தியா - சீனா இடையிலான போட்டி மோதலாக மாறக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் இயற்கையானவை என்றும், ஆனால், உலகின் நிலைத்தன்மைக்காக வலுவான கூட்டு ஒத்துழைப... மேலும் பார்க்க

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் நியூ... மேலும் பார்க்க

வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்: அமித் ஷா

கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.அஸ்ஸாம் மாநிலத்தின் க... மேலும் பார்க்க

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏஐ குறித்த... மேலும் பார்க்க

கேதர்நாத் யாத்திரை: ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தடை விதிக்க பாஜக கோரிக்கை!

கேதர்நாத் யாத்திரை செல்பவர்களில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது. கேதார்நாத் யாத்திரை தொடர்பான மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. கேதர்நாத் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக... மேலும் பார்க்க

மீரட்டில் பல்கலை.யின் திறந்தவெளியில் தொழுகை நடத்தியதாக மாணவர் கைது

மீரட்டில் உள்ள பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி வளாகத்தில் தொழுகை நடத்தியதாக மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் ஹோலி கொண்டாட்டங்களையொட்டி தனியார் பல்கலைக்கழக வளாகத்தில... மேலும் பார்க்க