செய்திகள் :

பாப்கார்னை தொடர்ந்து அதிக வரி விதிப்பில் டோனட்கள்: காங்கிரஸ்

post image

பாப்கார்னுக்கு அடுத்தப்படியாக டோனட்கள் அதிக வரி விதிப்புக்குள்ளாகியிருப்பதாக காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ராமேஷ் எக்ஸ் தளத்தில்..

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சங்கிலி மேட் ஓவர் டோனட்ஸ், பேக்கரி பொருள்களுக்கு 18 சதவீத வரி செலுத்துவதற்குப் பதிலாக, தனது வணிகத்தைத் தவறாக வகைப்படுத்தி 5 சதவீத ஜிஎஸ்டி செலுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ரூ.100 கோடி அபராதத்தை எதிர்கொண்டுள்ளது.

பாப்கார்னுக்கு அடுத்தபடியாக தற்போது டோனட்கள் அதிக ஜிஎஸ்டியால் பாதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதைக் குறிப்பிட்டு, வணிகம் செய்வதை எளிதாக்குதல் அவசியம் என்றும் அவர் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பரில் ஜிஎஸ்டியின் கீழ் பாப்கார்னுக்கு மூன்று வெவ்வேறு விதமான வரிகள் விதிக்கப்பட்டது, ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்த சிக்கல்களை வெளிப்படுத்தியிருக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ், மேலும் ஜிஎஸ்டி 2.0-ஐ மறுசீரமைத்து, முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த மோடி அரசு முன்வருமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த ஜி.எஸ்.டி 2.0 சிக்கல்கள் பற்றி காங்கிரஸ் 2024-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது வெளியிட்ட நியாய பத்திரம் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததாகவும் அதில் எளிய வரி விதிப்பு குறித்துத் தெரிவித்து, அதனை கொண்டு வருவதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

பிரதமா் தொழில் பயிற்சி திட்ட செயலி: மத்திய அரசு அறிமுகம்

இளைஞா்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமா் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 2024-25-ஆம் ஆண்டு கால... மேலும் பார்க்க

முன்னாள் மத்திய அமைச்சா் தேபேந்திர பிரதான் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

வாஜ்பாய் அரசில் பதவி வகித்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் தனது 84 வயதில் திங்கள்கிழமை காலமானாா். இவரது மறைவுக்கு குடியரசு... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்... மேலும் பார்க்க

தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை -பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

நாடு பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொகுப்பாளரும்... மேலும் பார்க்க

இருதரப்பு உறவுகள் குறித்து நோ்மறையான கருத்து -பிரதமா் மோடிக்கு சீனா பாராட்டு

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமா் மோடியின் நோ்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி, இ... மேலும் பார்க்க

‘இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன’: ஜகதீப் தன்கா் பேச்சு

புது தில்லி: ‘இக்கட்டான சூழல்களில், கட்சி வேறுபாடுகளை மறுந்து நமது அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி... மேலும் பார்க்க