செய்திகள் :

பாமக உள்கட்சி அதிகார மோதல் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார்

post image

நமது நிருபர்

பாமக உள்கட்சி அதிகார மோதல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தரப்பு செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக ராமதாஸ் ஆதரவாளரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ள பி. சுவாமிநாதன், தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஷுப்ரா சக்சேனாவை சந்தித்து மனு அளித்தார்.

அதில், பாமக தலைவராக அதன் நிறுவனர் - தலைவரான ராமதாúஸ கடந்த மே 30-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் அதே நாளில் அன்புமணி செயல் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் மூலம் கட்சியின் தலைவராக அன்புமணி செயல்பட முடியாது. இருப்பினும், தலைவர் பதவியில் தொடரும் அன்புமணி, தனது சொந்த ஆதாயம் மற்றும் லாபங்களுக்காக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் மீது மத்திய உள்துறையும் மத்திய உளவுத்துறையும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 9-ஆம் தேதி அன்புமணி கூட்டியது பொதுக்குழுவே இல்லை என்றும் ஆணைய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டதாக சுவாமிநாதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ராமதாஸ் வரும் ஆக.17-ஆம் தேதி கூட்டவுள்ள பொதுக்குழுவில் முறைப்படி அன்புமணிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி அதன் நகலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்குமாறும், முறைப்படி இரு தரப்பின் கடிதங்கள் வந்த பிறகு உரிய நடவடிக்கைக்கு பரிசீலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆக. 31க்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை ... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் - ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் மூன்றாவதாக சுர்ஜித்தின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜ... மேலும் பார்க்க

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் ரிப்பன் மளிகை! போராட்டக் களத்தில் பரபரப்பு!

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்பு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆ... மேலும் பார்க்க