செய்திகள் :

பாமக பெயர், சின்னம் விவகாரம்: நீதிமன்றத்தில் ராமதாஸ் கேவியட் மனுக்கள் தாக்கல்!

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தின் உரிமை தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கேவியட் மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கு இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகின்றது. இருவரும் மாறிமாறி ஊடகங்கள் மற்றும் கூட்டங்கள் வாயிலாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

கட்சியின் நிறுவனரான தானே தலைவராக செயல்படப் போவதாக ராமதாஸும், பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தானே தலைவராக தொடர்வதாக அன்புமணியும் அறிவித்துள்ளனர்.

மேலும், கட்சியின் பழைய நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை இருவரும் நியமித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே, இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாமகவின் கூட்டணியையும் வேட்பாளர்களையும் யார் அறிவிப்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தின் உரிமை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில், ராமதாஸ் நியமித்த கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தாரப்பினர் கட்சியின் பெயருக்கோ, மாம்பழம் சின்னத்துக்கோ உரிமை கோரினால், தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Caveat petitions have been filed by the PMK's founder Ramadoss, regarding the ownership of the name and symbol of the Party.

இதையும் படிக்க : நேபாளத்தில் ராணுவ ஆட்சி!

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாட்களுக்குப் பிறகு சரியத் தொடங்கியது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி ந... மேலும் பார்க்க

சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாள்கள் கடுமையான வெய்யில் இருந்து வந்த நிலையில் இன்று(புதன்கிழமை) மாலை பல பகுதிகளில் லேசான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் இரவு வரை மழை நீடிக்கும்!

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்றிரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.அடுத்த 2 மணி நேரத்துக்கு இன்று(செப். 10) மாலை 6 மணிக்குள்ளாக திருவள்ளூர், செங்கல... மேலும் பார்க்க

கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

உத்தமபாளையம்: கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க