செய்திகள் :

பாமக விரிசலுக்கு நானா காரணம்? கண்ணீர் விட்டு அழுதேன்: ஜி.கே. மணி

post image

விழுப்புரம்: பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் இன்று ராமதாஸை சந்திக்கச் சென்று கொண்டிருந்த ஜி.கே. மணி, செய்தியாளர்களை சந்தித்த போது, காலச்சூழலால் பாமகவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது சோதனையான காலக்கட்டம். உள்கட்சிப் பிரச்னையை வெளியே சொல்ல முடியாது. என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகள் கட்சிக்காக பணியாற்றிய நான் பாமக சிதற வேண்டும் என்று நினைப்பேனா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தத் தகவலைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுதேன்.

விரைவில் ராமததாஸ் - அன்புமணி சந்திப்பு நடக்க வேண்டும் என்பதுதான் பாமகவினரின் விருப்பம். பொறுப்பாளர்களை மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தினேன். ஆனால் மாற்றிவிட்டார். அது ராமதாஸின் விருப்பம். இப்போது உள்ளே சென்றால் ஏன் இதைப் பற்றி பேசினாய் என கோபித்துக் கொள்வார் என்றார்.

நிகழக்கூடாத சம்பவங்கள் பாமகவில் நடந்துவிட்டன. பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இணைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டார்.

கட்சியின் நிலைமை சரியாகவில்லை என்றால் தற்போது 2 முடிவுகள் எடுத்துள்ளேன், குடும்பதோடு தலைமறைவாவேன் அல்லது உயிர் துறப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்: கருணாநிதி குறித்து பிரேமலதா உருக்கம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வ... மேலும் பார்க்க

தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்த காங்கிரஸ்!

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டி... மேலும் பார்க்க

அப்பா, ஆசான், தலைவர்! - கருணாநிதியை நினைவுகூர்ந்த கனிமொழி!

நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது என கருணாநிதியை நினைவுகூர்ந்து திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிற... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டு: நேரக் கட்டுப்பாடு செல்லும் - உயர் நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு விதிகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழக சட்டப் பேரவையில், 2022-ஆம் ஆண்டு இணைய சூதாட்ட விளையாட்டுகளை முறைப்... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்தநாள்: முதல்வர், திமுகவினர் மரியாதை!

கருணாநிதி பிறந்தநாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை! முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செல... மேலும் பார்க்க

கரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி: தமிழகத்தில் ஒருவர்!

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தெற்காசியாவில் கரோனா நோய்ப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத... மேலும் பார்க்க