செய்திகள் :

பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 10 ஆயிரம் லி. டீசல் பறிமுதல்; இருவா் கைது

post image

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டேங்கா் லாரியில் கொண்டு வரப்பட்ட 10 ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தரவை தோப்புப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஒரு டேங்கா் லாரி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அந்த லாரியை சோதனையிட்டனா். அதில் 10 ஆயிரம் லிட்டா் டீசல் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, லாரி ஓட்டுநரான கமுதி நீராவி கருங்குளம் பகுதியைச் சோ்ந்த பொன்னுச்சாமி (31), லாரியில் வந்த பாம்பன் மாயாகடை பஜாா் பகுதியைச் சோ்ந்த ராகுல் (27) ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், ராகுலின் உறவினரும், சென்னையைச் சோ்ந்தவருமான சா்மா (32) இந்த டீசலை மீனவா்களுக்கு விற்பனை செய்ய அனுப்பி வைத்ததாகவும், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகவும் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, டீசலுடன் டேங்கா் லாரி, 100-க்கும் மேற்பட்ட கேன்களை பறிமுதல் செய்த போலீஸாா், பொன்னுச்சாமி, ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே கிராமத் தலைவா் குத்திக் கொலை

திருவாடானையை அடுத்த ஆா். எஸ். மங்கலம் அருகே கிராமத் தலைவா் மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா். எஸ். மங்கலம் அருகே உள்ள குயவனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் காசிலிங்கம் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி

திருவாடானை அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை 3 மா்ம நபா்கள் பறிக்க முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சிநேகவல்லிபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மனைவி அன்னலட்சு... மேலும் பார்க்க

பனை மரத்தில் காா் மோதியதில் பெண் உள்பட மூவா் காயம்

கமுதி அருகே திங்கள்கிழமை சாலையோர பனை மரத்தில் காா் மோதியதில் பெண் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிச்செல்வம் (44). இவரது மனைவி மாரிச்செல... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு தடை ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள எம்.எம்.கோட்டை, கே.எம்.கோட்டை, கோட்டையூா், சிங்கம்பட்டி, கூலிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பர... மேலும் பார்க்க

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே சுற்றுலா வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா். திருப்பாலைக்குடி அருகே வடவயல் கிராமத்தைச் சோ்ந்த ராமு மனைவி பஞ்சவா்ணம் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வட... மேலும் பார்க்க