செய்திகள் :

'பாரத் ஜோடோ விவாஹா’ என்ற பெயரில் திருமண அழைப்பிதழ்! சோனியா, ராகுலுக்கு அழைப்பு!

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் (இந்திய ஒற்றுமை நடைப்பயணம்) ஈர்க்கப்பட்ட மணமக்கள், தங்கள் திருமண அழைப்பிதழை பாரத் ஜோடோ விவாஹா என்ற பெயரில் அச்சிட்டுள்ளனர்.

இந்த அழைப்பிதழை சமூக ஊடகத்தில் பகிர்ந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, கடந்த 2022ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடத்தினார். இந்த நடைப்பயணத்தின் போது இளைஞர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களிடமும் கலந்துரையாடியது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையால் ஈர்க்கப்பட்ட மணமக்கள் இருவர் தங்களின் திருமண அழைப்பிதழை பாரத் ஜோடோ விவாஹா (இந்திய ஒற்றுமைக்கான திருமணம்) என்ற பெயரில் அச்சிட்டுள்ளனர்.

ஜம்மு மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபிலாஷா கோட்வால் மற்றும் பஞ்சாப் மற்றும் கேரளத்தை பூர்விகமாக கொண்ட வினல் வில்லியம் ஆகியோரின் திருமணம் பிப். 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

அவர்கள் பாரத் ஜோடோ விவாஹா என்ற பெயரில் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள அழைப்பிதழில் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவை குறிப்பிட்டு,

“இந்தியாவின் ஒற்றுமை, நீதி மற்றும் ஆன்மாவுக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருந்து வருகிறது. உங்கள் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அதே மதிப்புகளை உள்ளடக்கிய நாங்கள் இணையும் விழாவைக் கொண்டாட உங்களை நான் பணிவுடன் அழைக்கிறேன்.

காதலுக்கான எல்லைகளைத் தாண்டி, நம்பிக்கைகள் ஒன்றிணைந்து, பன்முகத்தன்மை கொண்டதாக எங்களின் இந்திய ஒற்றுமைக்கான திருமணம் இருக்கும்.

இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு எங்களை ஆசிர்வதித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்து: 4 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மா... மேலும் பார்க்க

மருத்துவமனை சிசிடிவி விடியோ வெளியான விவகாரம்: குற்றவாளிகளின் 22 டெலிகிராம் சானல்கள்!

மருத்துவமனையில் பெண்களை பரிசோதிக்கும் அறையில் இருந்த சிசிடிவியில் பதிவான விடியோக்களைத் திருடி அதனை விற்பனை செய்து வந்த சம்பவத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் மகாராஷ்டிரத்தில் இரண்டு பேரைய... மேலும் பார்க்க

முதல்வருக்கு கொலை மிரட்டல்!

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் ஷர்மாவிற்கு சிறைவாசி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.ஜெய்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (பிப்.21) இரவு செல்போன் மூலம் அழைப்பு விடுத்த நபர் அம்ம... மேலும் பார்க்க

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க