செய்திகள் :

பாராசிட்டமால் 650 வகை மாத்திரைக்கு கர்நாடக அரசு தடை!

post image

பாராசிட்டமால் 650 வகை உள்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று, கடந்த மே மாதத்தில் தர ஆய்வை கர்நாடக சுகாதாரத்துறை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய பாராசிட்டமால் 650 வகை, பான் டி வகை உள்ளிட்ட மாத்திரைகள் தரம் குறைவாக தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 14 நிறுவனங்கள் தயாரிக்கும் 14 வெவ்வேறு மாத்திரைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட மருந்துகள்:

  1. காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி.

  2. காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி. ஆர்எல்

  3. போமோல்-650 (பாராசிட்டமால் மாத்திரை 650 மி.கி.)

  4. மிடோ க்யூ7 சிரப்

  5. கோழிகளுக்கு செலுத்த பயன்படுத்தப்படும் எண்.டி., ஐ.பி., ஐ.பி.டி. தடுப்பூசி

  6. ஸ்ப்னிஃப்ளாக்ஸ் ஓஇசட் மாத்திரைகள்

  7. பான்டோகாட் - டிஏஆர்

  8. சோடியம் க்ளோரைடு ஊசி ஐ.பி. 0.9

  9. ஆல்பா லிபோயிக் சத்து மாத்திரைகள்

  10. பைராசிட் - ஓ சஸ்பென்ஷன்

  11. கிளிமிஸ் - 2

  12. அயன் (இரும்பு) சுக்ரோஸ் ஊசி யுஎஸ்பி 100 மி.கி. (இரோகெய்ன்)

  13. சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி.

  14. ஓம் சாந்தி கோல்டு கிளாஸ் குங்குமம்

சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

விவர இணைப்பில்...

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் பட்டியல்.

மேலும், மருத்துவர்கள், மருந்து விற்பனையாளர்கள், மருந்தக உரிமையாளர்கள் அனைவரும் உடனடியாக தடை செய்யப்பட்ட இந்த 14 வகை மருந்துகளின் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பு வைத்துள்ள மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் உடனடியாக உள்ளூர் மருந்து ஆய்வாளர் அல்லது உதவி மருந்து கட்டுப்பாட்டாளருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தடையை மீறி மருந்துகள் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Summary

The Karnataka Health Department has ordered a ban on 14 tablets and medicines, including Paracetamol 650 variant tablet.

இதையும் படிக்க :மகாராஷ்டிர தேர்தல் தகவலைத் தாருங்கள்; விவாதிக்கத் தயார்! காங்கிரஸ் அறிவிப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக் தகவல்!

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்திய கடற்படை பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை ... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து 3,400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: வெளியுறவுத் துறை!

"ஆபரேஷன் சிந்து" மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரானிலிருந்து சுமார் 3,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடை... மேலும் பார்க்க

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்!

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, ... மேலும் பார்க்க

அடுத்தக்கட்ட வர்த்தக பேச்சு! வாஷிங்டன் சென்றடைந்த இந்திய குழு!

அமெரிக்காவுடனான அடுத்த சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைக்காக, ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழுவொன்று அந்நாட்டு தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான, வர்த்தக பே... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் அதிரடி நடவடிக்கை! ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில், ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உதம்பூர் மாவட்டத்தின் பிஹாலி பகுதியில், கடந்த ஓராண்டுக்கு மேலாகத் த... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்காகவே வாக்களிக்கின்றனர்; சாதிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

பிகாரில் தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்களிக்கப்படுவதாக எழுந்த கருத்துக்கு ஜன் சுராஜ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.பிகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்... மேலும் பார்க்க