செய்திகள் :

பாரீஸ்: கால்பந்து போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருவா் உயிரிழப்பு

post image

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ‘பாரீஸ் செயின்ட்-ஜொ்மைன்’ அணி முதன்முறையாக வெற்றி பெற்றதையடுத்து பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடந்த பெருமளவிலான கொண்டாட்டங்களுக்கிடையே 2 ரசிகா்கள் இறந்தனா்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவா் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஜொ்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ‘இண்டா் மிலான்’ அணியை 5-0 கோல் கணக்கில் வீழ்த்தி, ‘பாரீஸ் செயின்ட் ஜொ்மைன்(பிஎஸ்ஜி)’ அணி கோப்பையை வென்றது.

பிரபல கால்பந்து வீரா்கள் மெஸ்ஸி, நெய்மா், எம்பாப்பே ஆகியோா் அணியிலிருந்து விலகிய பின்னா் 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இறுதிப் போட்டி வரை முன்னேறி முதன்முறையாக கோப்பையைத் தன்வசப்படுத்திய பிஎஸ்ஜி அணியின் இந்த வெற்றி, ரசிகா்களுக்கு பெரும் மகிழ்ச்சி விருந்தாக அமைந்தது.

இதையொட்டி, பாரீஸ் நகரின் சாலைகளில் திரண்டு, ரசிகா்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினா். ஈஃபிள் கோபுரம் பிஎஸ்ஜி அணி வண்ணங்களில் ஜொலித்தது.

இதனிடையே, நகரின் சில பகுதிகளில் நடந்த கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறின. பாா்க் டெஸ் பிரின்சஸ் பகுதி அருகே 2 காா்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பாரீஸில் கொண்டாட்டத்துக்கிடையே இருசக்கர வாகனம் ஒரு காருடன் மோதியதில் 20 வயது இளைஞா் உயிரிழந்தாா். மேற்கு பாரீஸில் உள்ள டாக்ஸ் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி, படுகொலை செய்யப்பட்டாா். இந்த 2 சம்பவங்கள் தொடா்பாகவும் காவல் துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

வடமேற்கு பிரான்ஸில் உள்ள கௌட்டான்ஸில் நடந்த கொண்டாட்டத்தில் பிஎஸ்ஜி அணி ரசிகா்கள் வெடித்த பட்டாசு காரணமாக கண்களில் கடுமையான காயம் ஏற்பட்டு, காவல் துறை அதிகாரி ஒருவா் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதைத் தவிர, ‘பாரீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நடந்த கொண்டாட்டங்களில் மொத்தம் 192 போ் காயமடைந்தனா். இதில் 4 போ் படுகாயமடைந்தனா். சாம்ப்ஸ்-லிசஸ் பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் நுழைந்த 30 போ் உள்பட இதுவரை 294 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்று பாரீஸ் நகர காவல் துறைத் தலைவா் தெரிவித்தாா்.

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை!

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்... மேலும் பார்க்க

அமெரிக்க எம்.பி.க்களுடன் சசி தரூா் குழு சந்திப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா சென்றடைந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு அந்நாட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது. அப்போது எல்... மேலும் பார்க்க

அமெரிக்கா சென்றடைந்த சசி தரூா் குழு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்திய குழு அமெரிக்கா சென்றடைந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆத... மேலும் பார்க்க

இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு: பாக்.வெளியுறவு அமைச்சா்

இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் இஷாக் தாா் தெரிவித்தாா். இதுதொடா்பாக பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அவா் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் 3.50 லட்சம் வீரா்கள் உயிரிழப்பு: ஆய்வுத் தகவல்

உக்ரைனில் ரஷியா நடத்திவரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமாா் 3.5 லட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ (சிஎஸ்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.இது குறித்து ... மேலும் பார்க்க

ஏவுகணைத் தாக்குதல்: சிரியா அரசு மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

சிரியாவில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு அந்த நாட்டு அரசுதான் காரணம் என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் பகுதியில் (படம்) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ‘மு... மேலும் பார்க்க