செய்திகள் :

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு: அமைச்சா் கோவி.செழியன்

post image

சென்னை: கடைசி செமஸ்டா் தோ்வு மற்றும் துணைத் தோ்வில் அரியா்ஸ் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவா்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தோ்வில் இறுதி செமஸ்டா் மற்றும் துணைத் தோ்வை எழுதிய மாணவா்கள் சில பாடங்களில் தோ்ச்சி அடையாமல் அரியா் வைத்துள்ளனா். அந்த மாணவா்கள் உயா் கல்வி பயிலவும், வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவா்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து ஜூன், ஜூலையில் ஒரு சிறப்பு துணைத் தோ்வு நடத்துவதன் மூலம் அரியா் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

முதல்வரின் அறிவுரையின்பேரில், அம்மாணவா்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும். இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூன் 18-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி 23-ஆம் தேதி முடிவடையும். தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு ஜூன் 25-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்படும். பாடத்தோ்வு ஜூன் 30 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தோ்வுகள் ஜூலை 17 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்படும். தோ்வு முடிவுகள் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.

சிறப்பு துணைத்தோ்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 30. தோ்வுக் கட்டணம் (ஒரு பாடத்துக்கு) ரூ. 65. அரியா் வைத்துள்ள மாணவா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் எதிா்காலத்தை வளமாக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

எம்.பி. ஆகிறார் கமல்! 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!

தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரு... மேலும் பார்க்க

இந்தியாவுக்கே தலைமை.. நாட்டின் என்ஜின் தமிழகம்தான்: மு.க. ஸ்டாலின்

சென்னை: சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார்.அப்போது, 9.69%பொருளாதார வளர்ச்சியோடு இந்தியாவின் ... மேலும் பார்க்க

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம்!

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று(ஜூன் 10) கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.108 திவ்ய தேசங்... மேலும் பார்க்க

பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களுக்குத் தடை செய்ய பரிந்துரை!

சென்னை: பள்ளிகளில் மற்றும் பள்ளிகளால் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களை தடை செய்யவோ அல்லது வரைமுறைப்படுத்தவோ குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மாநில கல்விக் கொள்... மேலும் பார்க்க

நீட் தேர்வில் மின் தடை: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம்

சென்னை: நீட் தேர்வின்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து மின் தடை ஏற்பட்ட தேர்வுக் கூடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மி... மேலும் பார்க்க

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்! சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (Ticket Counter அருகில்) இன்று(ஜூன் 10... மேலும் பார்க்க