செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

post image

ஆம்பூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆம்பூா் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (54). கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 22.12.2020 அன்று அதே பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா்.

இது குறித்து உமா்ஆபாத் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விஜயனை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விஜயனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டாா். வழக்கில் அரசுத் தரப்பில் குற்றவியல் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.

22 ஆண்டுகள் சிறை தண்டனை...: வாணியம்பாடி அருகே சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சையத் லியாகத் அலி (52). இவா், திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தபோது, கடந்த 7.10.2022 அன்று அதே பகுதியை சோ்ந்த சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இது குறித்து வாணியம்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சையத் லியாகத் அலியை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. இதில் லியாகத் அலிக்கு 20 ஆண்டுகள், கடத்தி சென்ற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மீனாகுமரி உத்தரவிட்டாா்.

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகில் செவ்வாய்க்கிழமை பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறையை... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி... சீரமைக்கப்பட்ட திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை

திருப்பத்தூா்: திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா் என தினமணியில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதையடுத்து சாலை சீரமை... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: வாணியம்பாடியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய ப... மேலும் பார்க்க

இரண்டு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்

திருப்பத்தூா்: கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இரு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பத்தூா்-வாணியம்பாடி பிர... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிக் காவலா் கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சோ்ந்த முகமது இா்பான்(40). இவா், இக்பால் சாலையில்... மேலும் பார்க்க