செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

திருப்பத்தூா்: வாணியம்பாடியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி நிசாா் அகமது (50). இவா் கடந்த 8.8.2021அன்று இரவில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த 3 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து உள்ளாா். அப்போது சிறுமியின் சப்தம் கேட்டு பெற்றோா் அங்கு சென்று சிறுமியை மீட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் வாணியம்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நிசாா் அகமதுவை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிந்த நிலையில், எதிரி நிசாா் அகமதுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும், கட்டத்தவறினால் மேலும், 9 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.மீனாகுமரி உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் குற்றவியல் வழக்குறைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.

குரிசிலாப்பட்டு பகுதியில் பலத்த மழை

திருப்பத்தூா் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. பிற்பகல் ல் குரிசிலாப்பட்டு, கூடப்பட்டு, கல்லுக்குட்டை, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பல்வேறு பகு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கந்திலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். பள்ளத்தூா் பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ்வரன் (40). இவரது வீட்டில் வியாழக்கிழமை மின்சாரம் தடைபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்ட... மேலும் பார்க்க

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடுகட்ட 792 பேருக்கு ஆணை: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி ஒன்றியப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்கள் திறப்பு மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 792 பயனாளிகளுக்கு பணியாணை வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடியில... மேலும் பார்க்க

ரத்த தான முகாம்

புனித வெள்ளியை முன்னிட்டு ரத்த தான முகாம் பெதஸ்தா மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, ஏஞ்சல் பவுண்டேசன், ஆம்பூா் ரெட்ரோஸ் கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பு ச... மேலும் பார்க்க

குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் சிவசௌந்தரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியா் பங்கேற்பு

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி கோயங்கொல்லை பகுதியில் குறுங்காடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்த... மேலும் பார்க்க