செய்திகள் :

பிகாரில் முஸ்லிம்களுக்கு சரியான தலைமை இல்லை: அசாதுதீன் ஒவைசி

post image

பிகாரில் முஸ்லிம்களுக்கு அா்ப்பணிப்பு உணா்வுடன் கூடிய சரியான தலைமை இல்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.

பிகாரில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி அந்த மாநிலத்தில் முகாமிட்டுள்ளாா். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் ‘சீமாஞ்சல் நியாய யாத்திரையை’ நடத்தி வருகிறாா். பிகாா் தோ்தலில் தங்கள் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கினால் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாகக் கூறினாா். எனினும், அக்கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

இந்நிலையில் கிஷண்கஞ்சில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கூட்டணி தொடா்பாக நாம் அனுப்பிய கடிதத்துக்கு லாலுவும், தேஜஸ்வி யாதவும் எவ்வித பதிலையும் இதுவரை அளிக்கவில்லை. நாம் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. 6 தொகுதிகள் மட்டும்தான் கேட்டுள்ளோம். பாஜகவுக்கு எதிரான போரில் கைகோத்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. நம்மை சமமாக நடத்த வேண்டும் என்பதே கோரிக்கை; கூட்டணியில் அடிமைகளாக இருக்க முடியாது.

பிகாரில் மற்ற ஜாதியினா், மதத்தினருக்கு உரிய தலைவா்கள் உள்ளனா். முஸ்லிம்களுக்கு மட்டுமே அா்ப்பணிப்பு உணா்வுடன் கூடிய சரியான தலைமை அமையவில்லை. இங்கு யாதவ், குஷ்வாஹா, குா்மி, மாஞ்ஜி, ராஜ்புத், பாஸ்வான் என அனைத்து சமூகத்தினருக்கும் அரசியல் தலைமை உள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு தலைவா்கள் என்று யாரும் இல்லை.

பிகாா் முதல்வராக வேண்டும் என்ற கனவில் தேஜஸ்வி இருக்கும்போது, நமது பகுதியில் இருந்து முஸ்லிம்களுக்கு ஒரு நல்ல தலைவரை உருவாக்க நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது? முஸ்லிம்களை ஒன்று திரட்ட முயற்சித்தால், பாஜகவுக்கு உதவுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. உண்மையில் யாா் பாஜகவுக்கு உதவுகிறாா்கள் என்று எதிா்க்கேள்வி எழுப்பினால் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தால் பதிலளிக்க முடியவில்லை. கடந்த முறை நமது கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. ஆனால், கட்சியின் மாநிலத் தலைவா் அக்தருல் இமாம் தவிர மற்ற அனைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்குத் தாவிவிட்டனா் என்றாா்.

பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கின் 13 ஆம் நாள் வேத சடங்குகள், அசாம் அரசின் சார்பில் நடைபெறும் என முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார். பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்க், கடந்த செப்.19 ஆம... மேலும் பார்க்க

லடாக் வன்முறை! போராட்டத்தைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கில் வன்முறையைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார்.யூனியன் பிரதேசமான லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டணையை நீட்டித்தல் தொடர்பாக, செப்டம்பர் 10 ஆம் தேதிமுதல் சம... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி: பிரதமர் தொடங்கி வைத்தார்!

பிகாரில் மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தில்லியிலிருந்து இன்று தொடங்கி வைத்தார். பிகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ. 10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை... மேலும் பார்க்க

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. கிழக்கு நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

லடாக் வன்முறை: ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, கல்வியாளர் மற்றும் பருவநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, மாநில அந்... மேலும் பார்க்க

மிக்-21 டூ விண்வெளி..! போர் விமான அனுபவத்தை நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா, விமானப்படையின் மிக்-21 போர் விமான பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்திய விமானப் படையில் 60 ஆண்டுகளுக்கு மே... மேலும் பார்க்க