செய்திகள் :

"பிஜாப்பூரில் மிகப்பெரிய வெற்றி": பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு

post image

புதுதில்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்ளார்.

நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள், இந்தியாவை நக்சலைட்டு இல்லாத நாடாக மாற்றுவதில் "பெரிய வெற்றி" என்று உள்துறை அமைச்சர் ஷா விவரித்தார்.

"இந்தியாவை நக்சலைட்டு இல்லாத நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில், பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கையில் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன," என்று அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நக்சலைட்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது நமது துணிச்சலான வீரர்கள் 2 பேரை இழந்துள்ளோம். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த அந்த மாவீரர்களுக்கு தேசம் எப்போதும் கடன்பட்டிருக்கும். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஷா கூறினார்.

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

"2026 மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சல் தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிப்போம், நக்சலிசத்தால் நாட்டின் எந்தவொரு குடிமகனும் தங்கள் உயிரை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வோம்," என்று அவர் மேலும் கூறினார்.

நக்சலைட்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது காயமடைந்த 2 வீரர்களும் சம்பவ இடத்தில் இருந்து விமானம் மூலம் ராயப்பூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் தற்போது ஆபத்தில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது, மற்றொருவருக்கு தலை மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை (பிப்.10) தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்றஇறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்க... மேலும் பார்க்க

ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிப்பு!

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இருந்து ‘அமா் தேஷ்’ நாளிதழின் ஆசிரியா் முகமதுா் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

இன்று லேசான பனிமூட்டம் நிலவும்

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும்: தமிழக அரசு

நாளை(பிப். 11) விடுமுறை நாள் என்றாலும் தைப்பூசத்தையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவு அலுவலகங்கள் நாளை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்... மேலும் பார்க்க

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார்.கோமலாஹரி பி... மேலும் பார்க்க

86 ஆயிரம் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சர்க்கார் ப... மேலும் பார்க்க