செய்திகள் :

பின்கோடுகளுக்கும் முடிவுரையா? வந்துவிட்டது டிஜிபின்!

post image

அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்ட அஞ்சல் குறியீடு எனப்படும் பின்கோடுகளுக்கு முடிவுரை எழுதும் வகையில் டிஜி பின் (DIGIPIN) என்ற டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன.

இந்தியாவில் 10 இலக்க எண்களுடன், 4 மீ. x 4மீ. பரப்பளவுக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தை, வழக்கமான பின்கோடுகளைப் போல அல்லாமல், துல்லியமாக அறிய உதவும் வகையில் இந்த டிஜிபின் செயல்படுகிறது.

ஒரு முகவரியை மிகவும் எளிமையாக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறையுடன், ஐஐடி-ஹைதராபாத் மற்றும் இஸ்ரோ இணைந்து, இந்த டிஜிபின் முறையை உருவாக்கியுள்ளன.

உங்களுக்கும் ஒரு டிஜிபின் வேண்டும் என்றால், இந்திய அஞ்சல் துறையின் இணையதளம் வாயிலாகவே அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

கூகுள் மேப்ஸ், லைவ் ஷேர், பின் கோடு என அனைத்துமே, ஒருவரது முகவரியைக் கண்டுபிடிக்க போதுமான உதவியை செய்வதில்லை. ஆனால், இந்த டிஜிபின் என்பது, ஒரு முகவரியை துல்லியமாகக் காட்டும் 10 இலக்க எண்ணாகும். யார் வேண்டுமானாலும் தங்களது முகவரிக்கு இந்த 10 இலக்கை எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.

சத்தீஸ்கர்: அமித் ஷா வருகைக்கு முன் 2 கிராம மக்களைக் கொன்ற நக்சல்கள்

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இரண்டு கிராம மக்களை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பமேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளுக்கு ... மேலும் பார்க்க

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா். கா்நாடக ப... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நாட்டின் குரல் இழப்பையும், மாண்புகளைக் கைவிடுதலையும் குறிக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ள... மேலும் பார்க்க