செய்திகள் :

பின்கோடுகளுக்கும் முடிவுரையா? வந்துவிட்டது டிஜிபின்!

post image

அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்ட அஞ்சல் குறியீடு எனப்படும் பின்கோடுகளுக்கு முடிவுரை எழுதும் வகையில் டிஜி பின் (DIGIPIN) என்ற டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன.

இந்தியாவில் 10 இலக்க எண்களுடன், 4 மீ. x 4மீ. பரப்பளவுக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தை, வழக்கமான பின்கோடுகளைப் போல அல்லாமல், துல்லியமாக அறிய உதவும் வகையில் இந்த டிஜிபின் செயல்படுகிறது.

ஒரு முகவரியை மிகவும் எளிமையாக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறையுடன், ஐஐடி-ஹைதராபாத் மற்றும் இஸ்ரோ இணைந்து, இந்த டிஜிபின் முறையை உருவாக்கியுள்ளன.

உங்களுக்கும் ஒரு டிஜிபின் வேண்டும் என்றால், இந்திய அஞ்சல் துறையின் இணையதளம் வாயிலாகவே அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

கூகுள் மேப்ஸ், லைவ் ஷேர், பின் கோடு என அனைத்துமே, ஒருவரது முகவரியைக் கண்டுபிடிக்க போதுமான உதவியை செய்வதில்லை. ஆனால், இந்த டிஜிபின் என்பது, ஒரு முகவரியை துல்லியமாகக் காட்டும் 10 இலக்க எண்ணாகும். யார் வேண்டுமானாலும் தங்களது முகவரிக்கு இந்த 10 இலக்கை எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.

அகமதாபாத் விபத்துக்கு பிறகு 38 மணிநேரத்தில் மற்றொரு சம்பவம்! நூலிழையில் தப்பிய ஏர் இந்தியா விமானம்!

அகமதாபாத் விபத்துக்கு பிறகு 38 மணிநேரத்தில் மற்றொரு ஏர் இந்தியா விமானம் 900 அடி உயரத்தில் இருந்து தரையை நோக்கி கீழே வந்துள்ளது. எனினும், விமானிகள் மீண்டும் விமானத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்த சம்பவம் த... மேலும் பார்க்க

சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி! பிகார் அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய... மேலும் பார்க்க

டி.கே. சிவக்குமாரை முதல்வராக்கவில்லை என்றால்... கர்நாடக எம்எல்ஏவின் பரபரப்பு பேட்டி!

கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து துணை முதல்வர் சிவக்குமாரின் ஆதரவாளரும் ராமநகர் எம்.எல்.ஏ.வுமான இக்பால் உசேன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்ச... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் முயற்சியில் டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம்: பிரதமர்

டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைத்தளமான லிங்கட்இனில் பதிவு ஒன்ற... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: 42 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டைய... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில், ரசாயன ஆலையின் வெடிவிபத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அந்நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுவதை, அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதல்வர்... மேலும் பார்க்க