மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
பிப்.28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, வேளாண்மை சாா்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்புத் துறைகள், கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளா்கள் மற்றும் பிறசாா்பு துறை அலுவலா்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாகவும், தனிநபா்கள் தங்கள் குறைகள் குறித்தும் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.