செய்திகள் :

பிரதமர் உரையில் மக்கள் பெரிதாக எதிர்பார்த்தார்கள்; அப்படியொன்றும் புதிதாகப் பேசவில்லை! -காங்.

post image

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) மாலை 5 மணியளவில் மக்களுடன் காணொலி வழியாக உரையாற்றினார். அதில், அவர் ஜிஎஸ்டி சீர்திருத்த விவகாரம் வருமான வரியில் தளர்வு உள்ளிட்ட விவகாரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இந்த நிலையில், பிரதமர் இன்று மாலை நாட்டு மக்களுடன் உரையாற்றப் போகிறார் என்று பரவலாக ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டு அரசால் மக்களிடம் அந்தச் செய்தி கொண்டு சேர்க்கப்பட்டது. இதனால் பிரதமர் மோடி பெரிதாக எதையோ சொல்லப் பொகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவர் அப்படியொன்றும் புதிதாக சொல்லவில்லை. இதனால் மக்களுக்கு ஏமற்றமே மிஞ்சியது என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மனோஜ் குமார் பேசும்போது, “அவர்கள்(அரசு) நாட்டு மக்களிடம் கொள்ளையடித்தனர். ஆனால் இப்போது, வரியில் தளர்வுகளை அறிவித்திருக்கிறோம் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

அமெரிக்காவால் எச்-1பி விசாவுக்கான கட்டணம் 1,00,000 டாலராக உயர்த்தப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலைப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அதேபோல, பரஸ்பர வரி விதிப்பு விவகாரம் குறித்தும் பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்த்தனர்.

இந்த நாட்டில் வேலைவாய்ப்பற்ற நமது சகோதர சகோதரிகளும் வேலைவாய்ப்புகளைக் குறிப்பிட்டு பிரதமர் பேசுவார் என்று காத்திருந்தனர். ஆனால் பிரதமர் மோடி இன்று பேசியிருப்பதில் புதிய விஷயங்கள் ஒன்றுமேயில்லை” என்றார்.

On PM Modi's address to the nation, Congress leader Manoj Kumar said: What PM Modi has said is nothing new

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் - ராணுவம் இடையே தீவிர சண்டை!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் - ராணுவம் இடையே தீவிர சண்டை இன்று(செப். 21) மூண்டுள்ளது. கிஷ்ட்வார் மாவட்ட வனப்பகுதிகளில் மூண்ட இந்த எண்கவுண்ட்டரில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வ... மேலும் பார்க்க

மோடியும் ராகுலும் மக்களை பிரச்னைகளிலிருந்து திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள்: பிரசாந்த் கிஷோர்

மோடியும் ராகுலும் உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.பிகாரில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ள அரசியல்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) தெரிவித்தார். சர்வதேச நாடுகளின் பொருள்களுடன் போட்டிபோடும் வகையில் உள்நாட்டுத் தயாரிப்புகள் ... மேலும் பார்க்க

வருமான வரி, ஜிஎஸ்டியில் சலுகை: பிரதமர் மோடி

நாட்டில் இதுவரை 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்திய பொருளாதாரத்த... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தல்

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நன்ஹி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் காணாமல் போ... மேலும் பார்க்க

ரூ. 5000 கோடி மதிப்பிலான 13 திட்டங்களுக்கு நாளை அடிக்கல்!

அருணாசலப் பிரதேசத்தில் ரூ. 5000 கோடி மதிப்புடைய 13 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப். 22) அடிக்கல் நாட்டவுள்ளார்.இதனைத் தொடர்ந்து மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்தி... மேலும் பார்க்க