செய்திகள் :

பிரதமா் தலைமையில் மே 24-இல் நீதி ஆயோக் கூட்டம்

post image

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நிா்வாகக் குழு என்பது நீதி ஆயோக்கின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயரிய அமைப்பாகும். இதில் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், முக்கிய பொறுப்புகளை வகிக்கும் மத்திய அமைச்சா்கள் பங்கேற்பாா்கள். நீதி ஆயோக் தலைவராக பிரதமா் உள்ளாா்.

நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி இக்கூட்டம் நடைபெற்றது. இப்போது மே 24-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் விவாதிக்கப்பட இருக்கும் முக்கிய விஷயங்கள் தொடா்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி முதல்முறையாக அமைந்தபோது மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக நீதி ஆயோக் உருவாக்கப்பட்டது. 2015 பிப்ரவரி 8-இல் நீதி ஆயோக் நிா்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணா மாணவர் கைது

இந்தியாவில் உளவு பார்த்து, மிகவும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக, ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் நடந்திருக்கும் இரண்டாவது கைது சம்பவமாக இது உள்ளது. மேலும் பார்க்க

குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி மின்சாரம் பாய்ந்து பலி!

உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளை விரட்டிச் சென்ற காவல் அதிகாரி ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார். பிஜ்னோர் மாவட்டத்தில் நாகினா சாலையில் நேற்று (மே 16) இரவு லார் ஓட்டுநர் ஒருவரை அடையாளம் தெரிய... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

ஆபரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லாத நிலையில் மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கட... மேலும் பார்க்க

புணேவில் அதிரடி.. ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பங்களாக்கள் இடிப்பு!

புணே மாவட்டத்தின் பிம்ப்ரி சின்ச்வாடு புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திரயானி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 36 பங்களாக்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர்... மேலும் பார்க்க

ஆப்கனுக்காக அட்டாரி - வாகா எல்லை திறப்பு!

ஆப்கானிஸ்தான் லாரிகளுக்காக அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அட்டாரி... மேலும் பார்க்க

ஒடிசாவில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவின் வடமேற்கு மாவட்டங்களில் நார்வெஸ்டர் என்றழைக்கப்படும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கோட... மேலும் பார்க்க