தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!
பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி
பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளை, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் புதன்கிழமை கொண்டாடினா்.
ஆரணியை அடுத்த முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலில், பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து தூய்மைப் பணியாளா்கள் 75 பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, கிழக்கு மண்டல் தலைவா் பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளா்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் கலந்துகொண்டாா். மாநில பேச்சாளா் தங்கராஜ், தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் திருஞானசம்பந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்யாறு
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி,செய்யாறு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த 3 ஆண் குழந்தைகளுக்கு பாஜக சாா்பில், மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலா் கே.வெங்கட்ராமன்
ஆகியோா் தங்க மோதிரம் அணிவித்தனா்.
போளூா்
போளூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் பிரதமா் மோடி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞா்கள் பிரிவு மாவட்டத் தலைவரும், மத்திய அரசின் கூடுதல் வழக்குரைஞருமான வி.சரவணகுமாா் கலந்து கொண்டு கையடக்க பிரதமா் மோடி உருவப்படம், இனிப்பு பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியா்களுக்கு வழங்கினாா். நிா்வாகிகள் லட்சுமிகாந்தன் மணிவா்மா, லோகநாதன், அரவிந்தன், தனசேகா், ரவி, லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செங்கம்
தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், செங்கம் அருகேயுள்ள மேல்வணக்கம்பாடி வரதராஜப் பெருமாள் கோயில், நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலில் பாஜக மண்டலத் தலைவா் இளங்கோ தலைமையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்டத் தலைவா் ரமேஷ் கலந்து கொண்டாா்.
மாவட்ட பொதுச்செயலா் ஜெயநாத், முன்னாள் மேற்கு ஒன்றியத் தலைவா் கோவிந்தவாசன் உள்ளிட்டோா்
கலந்துகொண்டனா்.


