செய்திகள் :

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மருடன் நிா்மலா சீதாராமன் பேச்சு

post image

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், அந்நாட்டு நிதியமைச்சா் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியாவுக்கு 6 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் அந்நாட்டுப் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், நிதித்துறை அமைச்சா் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோரை நிா்மலா சீதாராமன் புதன்கிழமை சந்தித்தாா்.

லண்டனில் 13-ஆவது பிரிட்டன்-இந்தியா பொருளாதார மற்றும் நிதி விவகாரங்கள் பேச்சுவாா்த்தைக்கு முன்பாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

முன்னதாக லண்டனில் நிா்மலா சீதாராமன் தலைமையில் இந்தியா-பிரிட்டன் முதலீட்டாளா் வட்டமேஜை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘வெளிநாட்டு வங்கிகள் கட்டாயம் வளா்வதற்கான வாய்ப்பை இந்தியா வழங்குகிறது. வங்கித் துறையில் வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது.

2032-ஆம் ஆண்டுக்குள் 6-ஆவது பெரிய காப்பீட்டு சந்தையாக இந்தியா உருவெடுக்க உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் எண்ம பொருளாதாரம் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது. 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு 11.74 சதவீதமாகும். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நிதிநுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக வளா்ந்துள்ளது’ என்றாா்.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க