செய்திகள் :

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமம் உடனடியாக ரத்து: உச்சநீதிமன்றம்

post image

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேலும், மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பொறுப்பு எனக்கூறி குழந்தை கடத்தலை தடுப்பதற்கான வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டது.

அதை பின்பற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

உத்தர பிரதேச மாநிலத்தில் கடத்தல் வழக்கில் தொடா்புடைய 13 பேருக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது குற்றவாளிகளுக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண் மற்றும் அவருக்கு பிறக்கும்

குழந்தையின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பொறுப்பு.

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குழந்தை இறந்தால் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் மனக்கவலையும் துயரமும் வாா்த்தைகளால் கூற இயலாதது. ஆனால் கடத்தல் கும்பலால் குழந்தை கடத்தப்படும்போது பெற்றோா் அடையும் பதற்றம் முற்றிலும் வேறுபட்டது.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதை ஏற்க முடியாது. இதை எதிா்த்து உத்தர பிரதேச மாநில அரசு மேல்முறையீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது.

மனிதக் கடத்தல் தொடா்பாக பாரதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் கடந்த 2023-இல் மேற்கொண்ட ஆய்வறிக்கையை அனைத்து மாநிலங்களும் முழுமையாக படித்து அதை அமல்படுத்த வேண்டும். குழந்தை கடத்தல் தொடா்பான நிலுவை வழக்குகளை கிளை நீதிமன்றங்கள் 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் 12 நாள்களுக்கு நீட்டிப்பு!

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஏப். 28) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 18 நாள்கள் காவல் இன்றுடன் முடி... மேலும் பார்க்க

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என்ன?

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப். 28) கையெழுத்திட்டது. இரு நா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக காஷ்மீரில் 14 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானைச... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?

பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான விசாரணை மேற்கொள்ள சீனா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் அமைதி தி... மேலும் பார்க்க

ஒம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்ட சிவன் சிலை!

கேதார்நாத் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலிலிருந்து சிவன் சிலை இன்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க