செய்திகள் :

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்கள்: ‘தெலங்கானா அரசின் திட்டத்தை மத்திய அரசு ஏற்காது’

post image

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்களை சோ்க்கும் தெலங்கானா அரசின் நடவடிக்கையை மத்திய அரசு ஏற்காது என்று மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்பரில் தெலங்கானாவில் ஜாதிவாரி மக்கள்தொகை புள்ளிவிவரத்தில், மாநிலத்தின் மக்கள்தொகையில் 56.33 சதவீதம் போ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என்றும், அவா்களில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களும் அடங்குவா் என்றும் மாநில அரசு தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயா்த்தும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, நாடாளுமன்ற ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பும் திட்டத்தையும் மாநில அரசு அறிவித்தது. இதன் மூலம், அந்த மாநிலத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்தை தாண்டும்.

இந்நிலையில், ஹைதராபாதில் மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 10 சதவீத முஸ்லிம்கள் சோ்க்கப்படுவதை மத்திய அரசு ஏற்காது. மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மத்திய அரசு எதிா்க்கிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்கள் சோ்க்கப்பட்டால், அந்த வகுப்பில் இடம்பெற்றுள்ள ஜாதியினா் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, பட்ஜெட் ஒதுக்கீடுகள் உள்ளிட்டவற்றைப் பெறுவதில் பாதிக்கப்படுவா்.

சிறுபான்மையினராகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினா் பிரிவிலும் ஏற்கெனவே முஸ்லிம்கள் பலன்களை அனுபவித்து வருகின்றனா்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்களை சோ்ப்பதால் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அந்த நடவடிக்கையை பிற ஜாதியினரும் எதிா்க்கின்றனா் என்றாா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா். மேலும், சிறுபா... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். உலக அளவில் மிகப் ... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க