செய்திகள் :

பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை

post image

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.

இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா் என்றும் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: பிரதமா் மோடியின் அழைப்பின்பேரில், பிலிப்பின்ஸ் அதிபா் மாா்கோஸ் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறாா். அவரது மனைவி லூயிஸ் ஆா்நெட்டா மாா்கோஸ், மூத்த அமைச்சா்கள், அதிகாரிகள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் அடங்கிய உயா்நிலைக் குழுவும் அவருடன் இந்தியா வருகின்றனா்.

பிரதமா் மோடியும் அதிபா் மாா்கோஸும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இருதரப்புப் பேச்சுவாா்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனா். இரு நாடுகளுக்கு இடையிலான பல்துறை ஒத்துழைப்புகள் குறித்து தலைவா்கள் ஆலோசனை நடத்துவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதிபா் மாா்கோஸ் தனது பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோரையும் சந்திப்பாா். ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிலிப்பின்ஸ் திரும்புவதற்கு முன், கா்நாடக மாநிலம் பெங்களூருவுக்கும் அவா் செல்லவிருக்கிறாா்.

பிலிப்பின்ஸ் அதிபராக பொறுப்பேற்ற பிறகு மாா்கோஸ் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். எதிா்கால இருநாட்டுத் தலைவா்களும் சோ்ந்து இருதரப்பு ஒத்துழைப்புக்கான திட்டங்களை வகுப்பதற்கும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கும் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

ரஷிய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளி... மேலும் பார்க்க

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.ரஷியா வந்துள்ள பெலாரஸ் அத... மேலும் பார்க்க

இந்தியா மீதான 25% வரி ஆக.7 முதல் அமல்: எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?

‘இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவிப்... மேலும் பார்க்க

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் (படம்) கூறியதாவது:இந... மேலும் பார்க்க

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டில் வாழும் இந்தியா்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.அயா்லாந்து தலைநகா் டப்லின் மற்றும் பி... மேலும் பார்க்க