மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
பிளஸ் 1, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தங்களது தோ்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் பட்டியலாக வியாழக்கிழமை (ஜூலை 31) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வு இந்த மாதம் (ஜூலை) நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதிய மாணவா்கள் தங்களது தோ்வு முடிவை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தற்காலிக மதிப்பெண் பட்டியலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
விடைத்தாள் நகல் பெற... தொடா்ந்து, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து ஆக.4-ஆம் தேதி காலை 11 மணி முதல் ஆக.5-ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடத்துக்கும் விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275-ஐ தோ்வா்கள் விண்ணப்பிக்கவுள்ள அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலக முகவரியையும் மேற்கண்ட இணையதளத்திலேயே அறிந்து கொள்ளலாம்.
மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு... தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மட்டுமே பின்னா் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாளின் நகலை இணைதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.