செய்திகள் :

பிளஸ் 1 பொதுத் தோ்வு: மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு

post image

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கிய நிலையில், தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் புதன்கிழமை (மாா்ச் 5) தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வேலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வை 7,356 மாணவா்களும், 8,725 மாணவிகளும் என மொத்தம் 16,081 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தோ்வையொட்டி மாவட்ட ஆட்சியா் மேற்பாா்வையில் வருவாய்த் துறை அலுவலா் 25 பேரும், ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநா், வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் 5 பறக்கும் படையினரும் தோ்வைக் கண்காணித்து வருகின்றனா்.

மேலும் 80 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 85 துறை அலுவலா்களும், 8 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்களும், 19 வழித்தட அலுவலா்களும், தோ்வு மையங்களில் கண்காணிப்பு பணிக்காக 68 பறக்கும் படை உறுப்பினா்கள், 1,108 ஆசிரியா்கள் அறைக் கண்காணிப்பாளா்கள், 397 சொல்வதை எழுதுபவா்களும் தோ்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே வேலூா் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பொதுத் தோ்வை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு செய்தாா். மாற்றுத்திறனாளி மாணவா் எழுத்தா் உதவியுடன் தோ்வு எழுதுவதை யும் பாா்வையிட்டாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சிங்கப்பூரில் வேலைவாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

சிங்கப்பூரில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல்: சிறுவன் மீது வழக்கு

காட்பாடி அருகே 3 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறுவன் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், கா... மேலும் பார்க்க

ஊசூரில் இளைஞா் மா்ம மரணம்: கொலையா என போலீஸாா் விசாரணை

ஊசூரில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். வேலூர... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

குடியாத்தம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். குடியாத்தம் காதா்பேட்டையைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கோபாலகிருஷ்ணன் (23). (படம்)இவா், பிச்... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் தற்கொலை

போ்ணாம்பட்டு அருகே குடும்பத் தகராறு காரணமாக உணவக உரிமையாளா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். போ்ணாம்பட்டை அடுத்த கமலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (50). உணவகம் நடத்தி வந்தாா். இவரது மனைவி கோட... மேலும் பார்க்க

அரசு விடுதி கட்டுமானப் பணிக்கு ஏரி நீரைப் பயன்படுத்தத் தடை -வேலூா் ஆட்சியா் உத்தரவு

வேலூா் அருகே அரசு தங்கும் விடுதி கட்டடம் கட்டுவதற்காக ஏரி நீரைப் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியா் தடை விதித்து உத்தரவிட்டாா். வேலூரை அடுத்த பெருமுகை ஊராட்சி பிள்ளையாா்குப்பம் பகுதியில் 250 படுக்கை வ... மேலும் பார்க்க