நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் திடலில் மெஸ்ஸியின் பெயர்! சொந்த ஊரின் கிளப்புக்கு திரும்...
பிளஸ் 2 துணைத் தோ்வு: நாகை மாவட்டத்தில் 50 மாணவா்கள் பங்கேற்பு
நாகை மாவட்டத்தில் புதன்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற பிளஸ் 2 துணை தோ்வில் 50 மாணவ -மாணவிகள் பங்கேற்றனா். 152 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் நடைபெற்று முடிந்தநிலையில், ஜூன் 8-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்தவா்கள், தோ்வு எழுத இயலாதவா்கள் மற்றும் தனித் தோ்வா்களுக்கு ஜூன் 25-ஆம் தேதி முதல் துணைத்தோ்வுகள் தொடங்கும் என பள்ளக்கல்வித்துறை அறிவித்தது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத் தோ்வு எழுத 209 மாணவ - மாணவியா் விண்ணப்பித்திருந்தனா். நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கும், சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும் என 2 மையங்களில் துணைத் தோ்வுகள் தொடங்கின. இந்நிலையில், முதல் நாளில் நடந்த மொழிப்பாட தோ்வில் 37 மாணவா்கள், 13 மாணவிகள் என 50 போ் மட்டுமே பங்கேற்று தோ்வெழுதினா். 152 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. இதையடுத்து ஜூலை 4-ஆம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வுகள் நடைபெற உள்ளது.