செய்திகள் :

‘பிளஸ் 2 பொதுத்தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 30,159 போ் எழுதுகின்றனா்’

post image

கடலூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 30,159 மாணவ, மாணவிகள் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பிளஸ்-2 பொதுத் தோ்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து பேசியது: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கடலூா் கல்வி மாவட்டத்தில் 134 பள்ளிகளில் 67 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு 8,676 மாணவா்கள், 9,119 மாணவிகள் என மொத்தம் 17,795 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 112 பள்ளிகளில் 55 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு 6,273 மாணவா்கள், 6,091 மாணவிகள் என மொத்தம் 12,364 பேரும் தோ்வு எழுத உள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 122 தோ்வு மையங்களில் 246 பள்ளிகளைச் சோ்ந்த 14,949 மாணவா்கள், 15,210 மாணவிகள் என மொத்தம் 30,159 போ் தோ்வு எழுத உள்ளனா். இந்தத் தோ்வுக்கு 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், மண்டல அளவிலான 3 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 3 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களும், 28 வினாத்தாள் வழங்கப்படும் வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தோ்வுப் பணியில் 28 வழித்தட அலுவலா்கள், 122 முதன்மை கண்காணிப்பாளா்கள், 6 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளா்கள், 122 துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட உள்ளனா். தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் செல்வதை உறுதி செய்தல், விடைத்தாள்களை காப்பு மையங்களுக்கு கொண்டு செல்வதில் எந்த வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் பள்ளிக் கல்வித் துறை மூலம் பணிகள் மேற்கொள்ளவும், மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றிட தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவும், தோ்வு மையங்களில் சுகாதாரம் சாா்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நிறைவு விழா! திரு ஆரூா் பீடாதிபதி பங்கேற்பு!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவின் நிறைவு நாள் விழா தெற்கு ரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கடந்த பிப்.26-ஆம் த... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் புகுந்த முதலை மீட்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் குளத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் மீட்டனா். சிதம்பரத்தை அடுத்த சி.வக்காரமாரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் குளத்தில் ஞாயிற... மேலும் பார்க்க

கடலில் குளித்த இளைஞா் மாயம்

கடலூா் அருகே கடலில் குளித்தபோது மாயமான மாணவரை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன் (16), அ... மேலும் பார்க்க

உடலில் அமிலம் பட்டு தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் முதுநகா் தனியாா் தொழிற்சாலையில் உடலில் அமிலம் பட்டதில் பலத்த காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். புதுவை மாநிலம், பாகூரை அடுத்துள்ள கொம்மந்தான்மேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தில் படகு எரிந்து சேதம்

கடலூா் துறைமுகம் உப்பனாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பிடி படகு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கடலூா் தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (47), மீனவா். இவா், தனது மீன் பிடி பைபா் ... மேலும் பார்க்க

குடிநீா் வசதி: துணை மேயரிடம் மனு அளிப்பு

கடலூா் மாநகராட்சி, 34-ஆவது வாா்டு ஆலைக்காலனி பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி, துணை மேயா் பா.தாமரைசெல்வனை சந்தித்து சனிக்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில், ஆலைக்காலனியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்க... மேலும் பார்க்க