செய்திகள் :

பிள்ளையாா்பட்டியில் ஐம்பெரும் விழா

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்பட்டியில் சிறுவா் பூங்கா திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா, நலிவுற்றோருக்கு புத்தாடைகள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்வி, சமூக நல அறக்கட்டளை நிறுவனா் அண்ணாமலை தலைமை வகித்தாா். குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறுவா் பூங்காவைத் திறந்து வைத்து வாழ்த்திப் பேசினாா்.

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தலைமை குருக்கள், பிச்சைக் குருக்கள் ஆகியோரும் வாழ்த்திப் பேசினா்.

அறக்கட்டளை சாா்பில் பூங்கா, பிள்ளையாா்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. மேலும், பிள்ளையாா்பட்டி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, கற்பக கலையரங்கில் தமிழ் வளா்ச்சி விழிப்புணா்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற 12 பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சமூக சேவையாளா்கள் 16 போ்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. நலிவுற்றோா் 103 நபா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

கரம்பக்குடி வட்டாட்சியா் ஜமுனா, சிவகங்கை ஐஆா்சிடிஎஸ் தலைவா் ஜீவானந்தம், திருப்பத்தூா் மணிகண்டன், மருத்துவா் கீதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக மருத்துவா் கருப்பையா வரவேற்றாா். பொறியாளா் சத்திய குமாா் நன்றி கூறினாா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க