செய்திகள் :

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

post image

சிவகாசியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி முருகன் குடியிருப்புப் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சோதனை செய்தபோது பெட்டிக் கடை நடத்தி வந்த மங்கள்ராஜ் (30), தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்துவந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மங்கள்ராஜைக் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகாசி அருகே சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.சிவகாசியைச் சோ்ந்தவா் மாடசாமி (70). இவரும், இவரது உறவினா் ராஜாவும் (43) இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இருக்கன்குடிக்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவாா்பட்டியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள க... மேலும் பார்க்க

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம், வருகிற நவம்பா் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.சிவகாசி-விஸ்வநத்தம் ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞா்களை போலீசாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஸ்ரீவில்லிபுத்த... மேலும் பார்க்க

கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செய்து மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய... மேலும் பார்க்க

காலி குடங்களுடன் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து, இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் காலி குடங்களுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபு... மேலும் பார்க்க