செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் ஆய்வு நடத்த அறிவுறுத்தல்

post image

காரைக்கால்: தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என கடைகளில் தொடா் ஆய்வு நடத்த ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

போதைப் பொருள் பயன்பாடு இல்லாத காரைக்காலை உருவாக்குவது குறித்து ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், பள்ளிகள், கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டிகளில் மாணவ, மாணவிகளிடமிருந்து வந்த புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவா்களுக்கு போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் கேடுகள் குறித்து விழிப்புணா்வை கூடுதலாக ஏற்படுத்தவேண்டும்.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என திடீா் சோதனை நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்த வேண்டும்.

புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணா்வு விடியோ மற்றும் நாடகம் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு மருந்துக் கடைகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தபட்டிருப்பதை உறுதி செய்வதோடு, மருத்துவரின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து அளிப்பதை தவிா்க்க அறிவுறுத்தவேண்டும்.

காரைக்கால் துறைமுக பகுதியை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கடலோரக் காவல்படையினருக்கும் இதில் பங்கு உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருள்களை தடுப்பதற்கான தீவிர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா மற்றும் துணை ஆட்சியா் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட ந... மேலும் பார்க்க

காரைக்கால் பள்ளியில் நிழல் இல்லா நாள் நிகழ்வு

அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிழல் இல்லா நாள் நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. புதுவை அறிவியல் இயக்கம், புதுவை கல்வித் துறையின் சமகர சிக்ஷா அமைப்புடன் இணைந்து காரைக்கால் தந்தை... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு

கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் அம்மையாா் நகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குதிரை மற்றும் யானை சிலை நிறுவுவதற்கு மேற்கொள்ளவே... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் ப... மேலும் பார்க்க

பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பெங்களூரில் பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் இளையோா் ஆப்தமித்ரா அமைப்பை உருவாக்க திட்ட... மேலும் பார்க்க

இயேசு திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு

புனித வெள்ளி நிகழ்வாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முக்தி செய்யும் நிகழ்ச்சியும், திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தவக்க... மேலும் பார்க்க